Translate

Sunday 30 December 2012

இராணுவத்தில் சேர்ந்த ஓடுகாலிக்கு உதவப்போன வைத்தியர் மாட்டிக்கொண்டார்


சிறிலங்கா இராணுவத்தில் பாலியல் தொழிலுக்காக சேர்ந்த தமிழ் பெண்ணுக்கு உதவுவதற்காக சென்ற தமிழ் வைத்தியர் ஒருவர் மாட்டிக்கொண்டுள்ளார்.  அனுராதபுரத்தில் சுகாதார வைத்தியஅதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பாலியல் தேவைகளுக்காக இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் வீட்டுக்கு வந்த பின் அத்தொழிலில் சலிப்படைந்ததை அடுத்து இராணுவத்திற்கு மீண்டும் செல்ல விரும்பம் இல்லை என்றும் இந்த ஓடுகாலிப்பெண் தான் இராணுவத்தில் இருந்து விலகப் போவதாகப் பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து மருத்துவர் சிவசங்கரின் உதவியுடன் அவர்கள் நேற்றுப் பிற்பகல் கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர்.
எனினும் சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலக வேண்டும் எனில் ஒரு மாதகால அவகாசம் தேவை என இராணுவத்தினர் தெரிவித்ததால் பெற்றோருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அந்த ஓடுகாலிப் பெண்ணையும் பெற்றோரையும் வீடு செல்ல அனுமதித்த இராணுவத்தினர் மருத்துவர் சிவசங்கரைத் தடுத்து வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அக் குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

No comments:

Post a Comment