“அமெரிக்காவின் திட்டம், இலங்கையில் படிப்படியாக காலூன்றி, இலங்கையை முற்று முழுதாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் என்று விடுதலைப்புலகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் முன்று கூறினார்” இவ்வாறு கூறியிருப்பவர் யாரோ விடுதலைப்புலிகள் ஆதரவாளர் அல்ல. இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார்!
“இந்தத் தகவலை பிரபாகரன் இந்திய சஞ்சிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறினார்” என்று தெரிவித்த இலங்கை அமைச்சர், அந்த பேட்டியில் பிரபாகரன் அமெரிக்கா பற்றி கூறியவற்றை, பொதுக்கூட்டம் ஒன்றில் படித்தும் காண்பித்தார்.

















ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளவாறு தேசிய கீதத்தை தமிழில் பாடுவது முட்டாள்தனமானதும் நடைமுறைச் சாத்தியமற்றதுமான சிந்தனையென பாதுகாப்புச் செயலாளர் கொட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த குழுவின் தலைவரான பிரேம்குமார் குணரட்னம் மற்றும் ஜே.வி.பி. அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஜே.வி.பி. மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியுமான திமுது ஆட்டிகல ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முன்னிலை சோசலிசக் கட்சியின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.











அரசாங்கத்தின் பலவீனமான வெளிநாட்டுக் கொள்கையே அமெரிக்காவின் பகையை சம்பாதித்துக் கொள்வதற்கும் இந்தியாவினால் கைவிடப்படுவதற்கும் முக்கியமான காரணமாகும் என்று ஐ.தே.க.வின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.






