Translate

Saturday 7 April 2012

“பிரபாகரன் சொன்னது நடக்கிறதே” இலங்கை அமைச்சரின் ஆச்சரியம்!


“அமெரிக்காவின் திட்டம், இலங்கையில் படிப்படியாக காலூன்றி, இலங்கையை முற்று முழுதாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் என்று விடுதலைப்புலகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் முன்று கூறினார்” இவ்வாறு கூறியிருப்பவர் யாரோ விடுதலைப்புலிகள் ஆதரவாளர் அல்ல. இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார்!
“இந்தத் தகவலை பிரபாகரன் இந்திய சஞ்சிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறினார்” என்று தெரிவித்த இலங்கை அமைச்சர், அந்த பேட்டியில் பிரபாகரன் அமெரிக்கா பற்றி கூறியவற்றை, பொதுக்கூட்டம் ஒன்றில் படித்தும் காண்பித்தார்.

மாலியில் தனிநாடு பிரகடனம், புலிகளுக்கு இருந்த அதே சிக்கல்களுடன்!


மாலி நாட்டின் வடபகுதியில் ராணுவத்துக்கு எதிராக போராடிவந்த போராளிக்குழு ஒன்று தனிநாடு பிரகடனம் செய்துள்ளது. மாலியில் சமீபத்தில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு அங்கிருந்த அரசு கவிழ்க்கப்பட்டது அதன் காரணத்தால் நாட்டில் உள்ள குழப்பத்தைப் பயன்படுத்தி, தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை தனி நாடாக பிரகடனம் செய்திருக்கிறது இந்த விடுதலை இயக்கம்.

இலங்கையில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு


இலங்கையின் கிழக்கு நகரமான பட்டிகலோயாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி, முன்னாள் இங்கிலாந்து ஆட்சியாளரும், சாரணிய இயக்க தந்தையுமான பாடன் பவல் பிரபு ஆகியோரின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

நோர்வேயில் 3பிள்ளைகளை கொடுமைபடுதிய தமிழ் தாய் -பிள்ளைளை பறித்த சிறார் மையம் !


நோர்வே நாட்டில் வசித்து வரும் தமிழ்குடும்ப தலைவியான Jacqueline டிலந்தினி தனது பன்னிரண்டு வயதுமகள் மற்றும்
எட்டுவயது மகள் ஆறுவயது மகனை அடித்து துன் புறுத்தியுள்ளார்.
இதை அடுத்து பாதிக்க பட்ட சிறார்கள் தாம் கல்வி பயின்ற பாடசாலையில் தம்மை தாய் அடித்து துன்புறுத்தினார் என முறையிட்டதை தொடர்ந்து  கொடுமை படுத்திய தாயாரிடம் இருந்து மூன்று பிள்ளைகளையும்
பிரித்தெடுத்து சிறார் நலன் காக்கும் அமைப்பினர் தமது பாதுகாப்பில் குழந்தைகளை வைத்து பராமரித்து வருகின்றனர்

ஐரோப்பாவில் புலிகள் தடை நீக்க இரகசிய பேச்சுக்கள் !


ஐரோப்பா எங்கும் தமிழீழ விடுதலை புலிகள் மீது விதிக்க பட்ட அனைத்துலக பயங்கரவாதிகள்
பட்டியலில் இருந்து அவர்களை நீக்கும் முயற்சியில் முக்கிய தமிழ் ஆதாரவு சக்திகள் முக்கிய நாடுகளுடன் இரகசிய சுழற்சி முறை
பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன .

விடுதலைப்போராளி இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு...!

இசைப்பிரியா..
1982 ஆம் ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப் பிறந்தாள். சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது. பேரழகும், வெள்ளை நிறமும், புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம்நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர். 
மழலையால் தன் குறும்புகளால் அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள். அக்கா மூவரோடும் தங்கையோடும் அயலாவரோடும் அழகுபதுமையாக அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல் பள்ளி தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில் 
அனைவரின் இதயத்தையும் கவர்ந்திழுக்கும் இதயத்தில் கோளாறு என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது.

வெளிநாட்டு மாணவர்கள் இனி பிரிட்டனில் வேலைபார்க்க முடியாது


இங்கிலாந்தில் பயிலும் இந்திய மற்றும் ஐரோப்பா அல்லாத நாடுகளை சார்ந்த மாணவர்கள்,தங்கள் கல்வி முடிவடைந்ததுதும் இரண்டு ஆண்டுகள் வரை இங்கிலாந்தில் பணிபுரியலாம் எனும் வசதி இதுவரை இருந்து வந்தது.

இதனால் இங்கிலாந்தில் பயில இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்தியா உள்பட அந்நிய நாட்டவர்களின் குடியேற்றத்தை தடுக்கும் வகையில் கேமரூன் அரசு,குடியேற்ற சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.

கிழக்கு மாகாணசபையை கலைக்க அரசு தீர்மானம்!

கிழக்கு மாகாணசபையைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலொன்றுக்குச் செல்ல அரசு தீர்மானித்திருக்கிறது. அதேசமயம், வடக்குக்கான மாகாணத் தேர்தலை இப்போதைக்கு நடத்துவதில்லை என்றும் அரசு முடிவெடுத்திருக்கிறது.   கிழக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் அடுத்தவருடம் மே மாதத்தில் முடிவடையவுள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மூத்த அமைச்சர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாணசபையை உடனடியாகக் கலைத்துவிட்டு தேர்தலொன்றுக்குச் செல்வதற்கு முடிவெடுத்திருக்கிறார் என்று அரச உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ். குடாநாட்;டில் சிங்கள வியாபாரிகளின் வருகை அதிகரிப்பு!

யாழ். குடாநாட்டை நோக்கி நடைபாதை சிங்கள வியாபாரிகள் பெருந்தொகையில் வந்துள்ளனர் என்றும் இவர்களுக்கு யாழ். மாநகரசபை ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் உள்ளுர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சிங்கள வியாபாரிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த சிங்கள வியாபாரிகள் யாழ்.முற்றவெளிப் பகுதியில் தமக்குரிய வியாபாரத்துக்கென இடங்களை ஒதுக்கி சிறிய கொட்டகைகளை அமைக்கும் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்............read more

கிழக்கு மாகாண சபையை கலைக்க அரசு தீர்மானம்; வடக்குக்கு இப்போதைக்கு தேர்தல் இல்லை


கிழக்கு மாகாண சபையை கலைக்க அரசு தீர்மானம்; வடக்குக்கு இப்போதைக்கு தேர்தல் இல்லை
news
கிழக்கு மாகாணசபையைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலொன்றுக்குச் செல்ல அரசு தீர்மானித்திருக்கிறது. அதேசமயம், வடக்குக்கான மாகாணத் தேர்தலை இப்போதைக்கு நடத்துவதில்லை என்றும் அரசு முடிவெடுத்திருக்கிறது. 

எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம்: இலங்கை அரசு

கொழும்பு: மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி எங்கிருந்து அழுத்தம் வந்தாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதனை செயல்படுத்தவிட மாட்டோம் என்று இலங்கை அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. தீர்மானம் கொண்டு வரப்பட்ட கையுடன் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில தூதரகங்களை இலங்கை அரசு மூடப்போவதாக அறிவித்தது.

ஆணைக்குழுவின் அரசியல் முன்மொழிவுகளை அமுல்படுத்த முடியாது: – இனப்பிரச்சினைக்கு தீர்வு காண புதிய யோசனை முன்வைப்பு! கோத்தபாய


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் ரீதியான முன்மொழிவுகளை அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் மலேசியத் தமிழர்களுக்கு நன்றி பாராட்டியுள்ளார் !


ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி, மலேசியத் தமிழர்கள் மேற்கொண்ட போராட்டங்களுக்கும், அரசியற் செயற்பாடுகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நன்றி பாராட்டியுள்ளார்.

ஜி.எல். பீரிஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஓடினார். ஆனாலும் கண்ட பலன் எதுவுமில்லை.-மங்கள சமரவீர


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தவறுமேயானால் ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட 15 நாடுகளையும் இழக்க வேண்டியேற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி. மங்கள சமரவீர நேற்று சபையில் எச்சரிக்கை விடுத்தார்.ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் நடைபெற்ற இரண்டாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே மங்கள சமரவீர எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை செல்லும் குழுவில் 7 தமிழக எம்.பி.க்கள்

வரும் 16-ந்தேதி இலங்கை செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் 7 தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர்

ஈழத்தமிழர்கள் நிலை பற்றி நேரில் கண்டறிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வரும் 16-ந்தேதி இலங்கைக்கு செல்கிறது. இந்த குழுவில் 14 பேர் இடம்பெறுகின்றனர். குழுவிற்கு நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குகிறார்.

தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார் - விக்கிரமபாகு


பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும்......
தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார் - விக்கிரமபாகு
 தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மகிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிடமுடியாது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை - கல்கிஸ்சை மாநகர சபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்களாம்;


அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்களாம்; தமரா குணநாயகம் 
லத்தீன் அமெரிக்க நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா பிரேரணையின் பின்னணியில் இலங்கையை பழிவாங்கும் நோக்கமே உள்ளது-சம்பிக்க

மகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்
தமிழ் மக்கள் நாட்டில் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர் அவர்களது கலாசாரங்களையும் பாதுகாக்கிறது அரசு கூறுகிறார் சம்பிக்க 

சுதந்திரமான விசாரணைப் பொறிமுறையை உடனடியாக உருவாக்குக : இலங்கையிடம் அமெ. வலியுறுத்து!

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பரிந்துரை செய்துள்ள மற்றும் அந்த அறிக்கையில் பதிலளிக்கப்படாதுள்ள நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உடனடியாக சுதந்திரமான, வெளிப்படையான, நடுநிலைமையான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்கா, செனட் சபையிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவம் செருப்போடு திரிவதில்லையாம்: புதுக்கண்டுபிடிப்பு !

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு சென்றுள்ள பிரித்தானிய MP மதிப்புக்குரிய(?) நெஸ்பி அவர்கள் ஈழத் தமிழர்கள் தொடர்பாக தமது விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 
பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் சுமார் 8 எம்.பீக்களைத் தெரிவுசெய்யும் வல்லமை படைத்தவர்களாக இருப்பதால், வாக்குகளுக்காக பிரித்தானிய அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு உதவுவதாக நெஸ்பி அவர்கள் கூறியுள்ளார். 


இதன் காரணமாகவே பிரித்தானியாவில் GTF மற்றும் BTF பேன்ற அமைப்புகள் செல்வாக்கோடு செயல்படக்கூடியதாக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறிப்பாக உலகத் தமிழர் பேரவை(GTF) தனது செயல்பாடுகளுக்கு MPக்களை பயன்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களவரின் போருக்கான செலவை புலம்பெயர் தமிழ் மக்கள் கட்டி முடித்தனர் ?

இலங்கை அரசானது தான் HSBC வங்கியிடம் வாங்கிய 500 மில்லியன் டாலர் கடனை, முழுதாகக் கட்டி முடிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. போர் உக்கிரமடைந்த காலகட்டமான 2007ம் ஆண்டு, சுமார் 500 மில்லியன் டாலர்களை அபிவிருத்தி என்ற போர்வையில், இலங்கை அரசு கடனாப் பெற்றது. 


இத்தொகையானது முழுதும் பணமாகவே இலங்கை அரசுக்கு குறிப்பிட்ட வங்கியால் வழங்கப்பட்டது யாவரும் அறிந்த விடையம். இதனைக் கொண்டு இலங்கை அரசு பெரும் ஆயுதத்தளவாடங்களை வாங்கியிருந்தது. இச்செய்தியானது 2007ம் ஆண்டு பல ஊடகங்களால் வெளியானது மக்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் தற்போது இத்தொகையை வட்டியும் முதலுமாக முழுமையாகத் தாம் செலுத்தவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

தேசிய கீதத்தை தமிழில் பாடுவது முட்டாள்தனமானது

தமிழில் தேசியகீதம் பாடுவதா ? சீ சீ அது கேலிக்கூத்து என்கிறார் கோத்தபாய !
ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளவாறு தேசிய கீதத்தை தமிழில் பாடுவது முட்டாள்தனமானதும் நடைமுறைச் சாத்தியமற்றதுமான சிந்தனையென பாதுகாப்புச் செயலாளர் கொட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பேச்வார்த்தைகளில் மூன்றாம் தரப்பை இணைத்துக் கொள்ள முடியாது

பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பினரை இணைத்துக் கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், அரசாங்கத்திடம் கோரியிருந்தார்.

ஜெனிவா தீர்மானத்தை: இலங்கைக்கு எதிரான மிகப்பெரிய சதியாக பரப்புரை செய்து சிங்களத் தேசியவாதத்தை, தனது நலன்களுக்காக தட்டி எழுப்பி விட்ட மகிந்த?


இன்னொரு தீர்மானத்துக்கு வழி கோலுமா அரசாங்கம்? 
  • ஜெனிவா தீர்மானத்தை தட்டிக்கழிப்பதற்கு அரசாங்கம் இப்போது ஒரு ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.
    “நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் எமக்கு உள்ள பொறுப்பை, எவரும் எடுத்துக் கூற வேண்டியதில்லை“-இது தான் அந்த ஆயுதம்.
    யாரும் எதையும் கூற வேண்டியதில்லை, எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எல்லாம் தெரியும் என்ற கட்டத்துக்கு அரசாங்கம் வந்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், இதனை ஏற்க முடியாது என்றும் அறிவித்து விட்டது.

குமார மாத்தையா கைது செய்யப்பட்டார்! .


ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த குழுவின் தலைவரான பிரேம்குமார் குணரட்னம் மற்றும் ஜே.வி.பி. அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஜே.வி.பி. மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியுமான திமுது ஆட்டிகல ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முன்னிலை சோசலிசக் கட்சியின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

தனித் தனிக் கட்சிகளை பலப்படுத்துவதைத் தவிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்துவதே இன்றைய தேவையாகும் ரிபிசியில் சுரேஸ் பிறேமச்சந்திரன் MP

தனித் தனிக் கட்சிகளை பலப்படுத்துவதைத் தவிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்துவதே இன்றைய தேவையாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் ரிபிசியில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

Friday 6 April 2012

எல்எல்ஆர்சி முன் சாட்சியமளித்த பெண் 4ம் மாடிக்கு கடத்தல்


எல்எல்ஆர்சி முன் சாட்சியமளித்த பெண் அச்சத்தில்
இலங்கை அரசாங்கம் அமைத்த நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த கல்முனையைச் சேர்ந்த இரத்தினம் பூங்கோதை என்ற கணவனை இழந்தப் பெண், எதிர்வரும் சனிக்கிழமையன்று விசாரணைக்கு வரவேண்டுமென்று கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பரிவு கல்முனை பொலிஸ் ஊடாக அறிவித்துள்ளது.

இளம்பெண் விவகாரத்தில் ராமஜெயம் கடத்திப் படுகொலை: பொலிஸார் தகவல்


திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 29ம் திகதி மர்மக்கும்பல் ஒன்றினால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பெண் நாலாம் மாடிக்கு அழைப்பு – சாட்சிகள் மத்தியில் அச்சம்

Posted Imageசிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த - கணவனை இழந்த பெண் ஒருவர் சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணைக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளது, ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்தோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னை ஒரு தமிழனாக உணரவைப்பது ‘பிரபாகரன்” என்ற பெயர்தான்!

Posted Imageஅண்மையில் ஸ்கன்டிநேவிய நாடொன்றுக்கு ஒரு பேராசிரியரை சந்திக்க சென்றிருந்தேன். அவர் தென்னாபிரிக்க தமிழர் ஆனால் தமிழ் சூழலுக்கு அப்பால் தனது வாழ்வை கட்டமைத்திருப்பவர்.

தமிழ்மக்களை ஏமாற்றியது போன்று அனைத்துலக சமூகத்தை ஏமாற்ற முடியாது – இரா.சம்பந்தன் ஆவேசம்

தமிழ்மக்களை 60 ஆண்டுகளாக ஏமாற்றியது போன்று அனைத்துலக சமூகத்தை உங்களால் ஏமாற்ற முடியாது என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

ஜெனிவா தீர்மானம் தொடர்பான சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வட,கிழக்கில் புலி செயற்பாடு இருப்பதான செய்தியில் உண்மையில்லை : இராணுவப் பேச்சாளர் _


  வடக்கு மற்றும் கிழக்கில் புலிகளின் நடவடிக்கைகள் காணப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. உள்ளார்ந்த பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து பொறிமுறைகளையும் படையினர் மேற்கொண்டுள்ளனர் என்று இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. 

கொழும்பு தமிழ்நாட்டில் வெள்ளைவானில் தமிழ் நபர் கடத்தல் : மனோவி டம் முறைப்பாடு _


  கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உள்வரும் தமிழ்நாடு என்று அழைக்கப்படும் நவகளனிபுர பகுதியில் வெள்ளை வேனில் வந்த நபர்களால் பாலகிருஷ்ணன் ஆனந்தன் என்ற 45 வயது நபர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

யாழ் சென்று திரும்பிய வணிகர் காணாமல் போயுள்ளார்!


யாழ் சென்று திரும்பிய வணிகர் காணாமல் போயுள்ளார்!

கொழும்பினை வாழ்இடமாக கொண்ட 45 அகவையுடைய ன சிவஞானம் இரவிச்சந்திரன் என்பர் அவரது சொந்த ஊரான கரைநகருக்கு சென்று திரும்பும் போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் வளங்களைச் சூறையாடும் ஆளும்தரப்பினர்

வடமாகாண ஆளுநரினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரமேம்பாட்டிற்கென வழங்கப்பட்ட 50 ஏக்கர் நிலத்தில் அமைச்சர் றிசாட் பதியூதீனின் ஆதரவாளர் ஒருவர் 4 ஏக்கர் நிலத்தை வளைத்துப்போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் காந்தி சிலை சேதம்

இலங்கையின் கிழக்கு நகரமான பட்டிகலோயாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. காந்தி சிலையோடு, முன்னாள் இங்கிலாந்து ஆட்சியாளரான பாடன் பவல் பிரபு, மற்றும் 2 தமிழ் அறிஞர்களின் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம்: இலங்கை அரசு

கொழும்பு: மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி எங்கிருந்து அழுத்தம் வந்தாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதனை செயல்படுத்தவிட மாட்டோம் என்று இலங்கை அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. தீர்மானம் கொண்டு வரப்பட்ட கையுடன் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில தூதரகங்களை இலங்கை அரசு மூடப்போவதாக அறிவித்தது.

இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழு : அதிமுக இடம் பெறுகிறது

புதுடெல்லி :  எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பிக்கள் குழு வரும் ஏப்ரல் 16ம் தேதி முதல் 25ம் தேதி வரையில் இலங்கைக்கு பயணம் செல்கிறன்றனர். தமிழர் பகுதிகளை இக்குழுவினர் பார்வையிடவுள்ளனர்.  இக்குழுவில் தமிழக எம்.பிக்களும் பங்கேற்க வேண்டும்  என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

சில கடும்போக்குடையவர்களே நல்லிணக்கம் ஏற்படுவதனை தடுக்கின்றனர் – சந்திரஹாசன்


சில கடும்போக்கு டையவர்களே நல்லிணக்கம் ஏற்படுவதனை தடுக்கின்றனர் – சந்திரஹாசன்
சில கடும்போக்குடையவர்களே நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதனை தடுத்து வருவதாக மூத்த அரசியல் தலைவர் அமரர்  எஸ் ஜே வி ல்வநாயகத்தின் புதல்வர் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
 
பெரும்பான்மையான மக்கள் ஜனநாயக ரீதியில் நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டுமென விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஏற்கனவே அதிகரம் பகிரப்பட்டுள்ளது – பாதுகாப்புச் செயலாளர்


 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஏற்கனவே நாட்டில் அதிகாரம் பகிரப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
சில அரசியல்வாதிகளினால் விடுக்கப்படும் கோரிக்கைகைளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநகர் கடற்கரை வீதியில் திடீரென தோன்றும் விகாரை; மக்கள் ; ஆத்திரம்

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் மாநகர சபை வளாகத்துக்குச் சமீபமாக அவசர அவசரமாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டுவருகிறது என்று யாழ். மாநகர சபை எதிர்க் கட்சி உறுப்பினர் ஆ.பரஞ்சோதி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தப் பகுதியில் புராதன அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு முன்பாக அரச மரத்தின் கீழ் இந்த விகாரை அமைக்கும் பணிகள் இரவு பகலாக மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் பிரதேச மக்கள் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் சிலைகள் உடைப்பு


பேடன் பவுல் சிலை உடைக்கப்பட்ட காந்தியின் சிலை மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தர், மகாத்மா காந்தி உருவச் சிலைகள் உட்பட நான்கு முழு உருவச் சிலைகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு விசமிகளினால் சேதமாக்கப்பட்டுள்ளன.

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா லண்டனில் இருந்து தப்பியோட்டம்

லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரித்தானியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில், விரைவில் கொழும்பு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரித்தானியாவின் “தி கார்டியன்“ நாளேடு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

பாலித கொஹன்னவை விசாரிக்க அவுஸ்திரெலிய பொலிசார் இணக்கம் ?

அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் அவுஸ்திரேலிய சமஷ்டி தமிழர் அமைப்பு, பாலித கொஹன்னவை போர்குற்றத்துக்காக விசாரிக்கவேண்டும் என சட்ட அமைச்சரைக் கோரியுள்ளது. இதனை அடுத்து சட்ட அமைச்சு இந்த விசாரணையை அவுஸ்திரேலியப் பொலிசாரிடம் முறைப்படி கையளித்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. பாலித கொஹன்ன இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர். அவர் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பிரஜா உரிமைகொண்டவர் ஆவார்.

அமெரிக்காவின் திட்டத்தை பிரபாகரன் அறிந்திருந்தார்: சம்பிக்க ரணவக்க

திருகோணமலையில் தமது தளமொன்றை நிறுவுவதற்காக யுத்தத்தை நீடிக்கவும் தீவிரப்படுத்துவதற்குமான அமெரிக்காவின் முயற்சிப்பது குறித்து இந்திய சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எச்சரித்திருந்ததாக மின் சக்தி வலுசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று கூறியுள்ளார்.

எரிபொருளையும் நிரப்பி காசையும் கொள்ளையடித்த கும்பலுக்கு வலைவீச்சு !

நொச்சியாகம பிரதேசத்தில் 4,300 ரூபாவிற்கு எரிபொருள் நிரப்பியதன் பின்னர் அங்கிருந்த 68 ஆயிரம் ரூபாவினையும் ஒரு குழுவினர் எடுத்துச் சென்றுள்ளனர். இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஐவர் அடங்கிய குழு ஒன்று செயற்பட்டுள்ளது. இவர்கள் எரிபொருள் நிலையத்தில், படு நிதானமாக எரிபொருளை நிரப்பி விட்டு பின்னர் அங்கே கடமை புரிந்த ஊழியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். 

மூன்று மாத கட்டாய விடுமுறை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் சமரசிங்க


அரசாங்கத்தின் பலவீனமான வெளிநாட்டுக் கொள்கையே அமெரிக்காவின் பகையை சம்பாதித்துக் கொள்வதற்கும் இந்தியாவினால் கைவிடப்படுவதற்கும் முக்கியமான காரணமாகும் என்று ஐ.தே.க.வின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Tuesday 3 April 2012

Someone with such a handicap would be a terrible burden on us. We have our own lives to live

A story is told about a soldier who was finally coming home after having fought in Vietnam. He called his parents from San Francisco.
"Mom and Dad, I'm coming home, but I've a favor to ask. I have a friend I'd like to bring home with me"

How many of you want to kill this man...? Like n Share this If u are against girls killing.


அந்த மக்களுக்கும் போஸ்டருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


திராவிடம் - உங்களையும் எங்களையும் தமிழினத்தை எவ்வாறெல் லாம் வீழ்த்துகிறது


திராவிடம் - உங்களையும் எங்களையும் தமிழினத்தை எவ்வாறெல் லாம் வீழ்த்துகிறது 

http://www.facebook.com/groups/faceboolnti72/
நாம் தமிழர் இயக்கம் கட்சியாக உருமாற்றம் பெற்ற போது,கடந்த சட்ட மன்ற தேர்தலில் வை கோ வழிகாட்டுதலில் கன்னட பாப்பாத்தியை ஆதரிப்பதாக சீமான் அறிவித்தார் .

அன்று "சீமான் செல்லும் திராவிட பாதை கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்" என்ற கட்டுரையோடு "நாங்கள் தமிழர்கள் விழிப்புணர்வு" இயக்கம் உருவானது .

ரைம்ஸ் சஞ்சிகையின் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் நவி பிள்ளை இடம்பிடிப்பாரா? - உங்களது வாக்குகளை அளியுங்கள்.



உலகின் பிரபல ரைம்ஸ் சஞ்சிகையின் 2012 ஆண்டுக்குரிய, உலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய வாக்கெடுப்பு தேர்வுப் பட்டியலில், ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இம்முறை இடம்பிடித்துள்ளார்.

100வது உலகின் சக்திவாய்ந்த நபர் நவநீதம் பிள்ளை ?


100வது உலகின் சக்திவாய்ந்த நபர் நவநீதம் பிள்ளை ?

உலகின் பிரபல ரைம்ஸ் சஞ்சிகையின் 2012 ஆண்டுக்குரியஉலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய வாக்கெடுப்பு தேர்வுப் பட்டியலில்ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை  இம்முறை இடம்பிடித்துள்ளார்.

வணக்கம் சொல்லும் பண்பு தெரியாத யாழ். அரச ஊழியர்களும்! இராணுவத்திற்கு புகழ் பாடும் இமெல்டாவும்!!


வணக்கம் சொல்லும் பண்பு தெரியாத யாழ். அரச ஊழியர்களும்! இராணுவத்திற்கு புகழ் பாடும் இமெல்டாவும்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கு ஒருவரை கண்டால் வணக்கம் சொல்லும் பண்பு கூட இல்லை என வெளிநாட்டு பிரதிநிதி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.  இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்ற பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோட் நஸ்பி  யாழ். மாவட்டச் செயலக நிர்வாக செயற்பாடுகளை அறியும் பொருட்டு, செயலகத்தின் சில பகுதிகளுக்கு சென்றார். அதன்போது, அவர் பணியாளர்களைப் பார்த்து, ஆங்கிலத்தில் ( Good Morning ) காலை வணக்கம் என்றார். ஆனால், ஓரிரு பணியாளர்களைத் தவிர பெரும்பாலான பணியாளர்கள், பதில் வணக்கம் கூறவில்லை. அவர் திரும்ப திரும்ப வணக்கம் சொன்ன போதும் அவர்கள் மௌனமாக இருந்தனர்.............read more

ராவூப் ஹக்கீம் கலந்து கொள்ளும் கம்பன் விழாவைப் புறக்கணியுங்கள்!


ராவூப் ஹக்கீம் கலந்து கொள்ளும் கம்பன் விழாவைப் புறக்கணியுங்கள்!


ஐ.நா. மனித உரிமை பேரவையில்  சிறீலங்கா தொடர்பாக அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தை தோற்கடிக்க  அரபு நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் சிறீலங்கா அரசிற்கு ஆதரவாகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் ஓடி ஓடிப் பரப்புரை செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை கொழும்பில் நடைபெற உள்ள கம்பன் விழாவில் தொடக்கவுரையாற்றுவதற்கு கம்பன் விழா ஏற்பாட்டுக்குழுவினர் அழைத்திருப்பதை கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது...............  read more 

யாழ்ப்பாணம் மிக நன்றாக இருக்கிறது- படம் காட்டிய இமெல்டா சுகுமார்!


யாழ்ப்பாணம் மிக நன்றாக இருக்கிறது- படம் காட்டிய இமெல்டா சுகுமார்!


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் லோட் நஸ்பி இன்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்மா சுகுமாரை சந்தித்தார். மாவட்ட செயலகத்திற்கு வந்த அவர்களுக்க தனது மடிக்கணணியில் படம் காட்டியதுடன் யாழ்ப்பாணத்தில் துரித அபிவிருத்தி நடைபெறுவதாகவும், சகலதும் நன்றாக நடைபெறுவதாகவும் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.......read more