Translate

Saturday 7 April 2012

ஐரோப்பாவில் புலிகள் தடை நீக்க இரகசிய பேச்சுக்கள் !


ஐரோப்பா எங்கும் தமிழீழ விடுதலை புலிகள் மீது விதிக்க பட்ட அனைத்துலக பயங்கரவாதிகள்
பட்டியலில் இருந்து அவர்களை நீக்கும் முயற்சியில் முக்கிய தமிழ் ஆதாரவு சக்திகள் முக்கிய நாடுகளுடன் இரகசிய சுழற்சி முறை
பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன .
இலங்கை அரசு புரிந்த போர்குற்ற மனித குலத்துக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்
நிறைவேற்ற பட்ட நிலையில் தற்போது அந்த அமைப்பு முற்றாக அழிக்க பட்ட நிலையில் செயல் இழந்து செத்துப்போன அந்த அமைப்பு மீள் எழ முடியாது என்ற நிலையில் அவர்கள் மீதான தடை எடுக்க பட உள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
எதிர் வரும் ஓராண்டுக்குள் ஐநாவிதித்த இலங்கை போர்குற்றம் தொடர்பாக இலங்கை தாம் புரிந்த குற்றத்திற்கு படை தளபதிகள் உட்பட அரச தலைவர்களுக்கு தண்டனை
வழங்க தவறும் பட்சத்தில் இலங்கைக்கு பெரும் நெருக்கடியினை தந்து தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் இந்த தடை நீக்க படவுள்ளது .
புலிகள் அழிக்க பட்ட பின்னரும் இலங்கையில் தொடர்ந்து பயங்கர வாத சட்டம் அமுல் படுத்த பட்ட நிலையில் தாம் வித்தித்த தமது நாடுகளில் உள்ள புலிகள் மீதான தடை நீக்க
இவர்கள் ஒன்றிணைந்து வருவார்கள் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன !

No comments:

Post a Comment