Translate

Saturday 17 December 2011

''kz;z;ppd; ike;;ju;'' jpU tPurpq;fk; ghyRg;gpukzpak;
r%f Nrtfh; - th;j;jfh;

Gq;FLjPT 10k; tl;lhuk; jpU jpUkjp tPurpq;fk; jk;gjpfspd; ehd;fhtJ Gjy;th; jpU ghyRg;gpukzpak; mth;fs;. ,th; jdJ Muk;gf;fy;tpia Gq;FLjPtpYk;> cah; fy;tpia njy;ypg;gis kfh[df; fy;Y}upapYk; fw;whh;. gpd;G Nkw;gbg;gpw;fhf 1978k; Mz;L yz;ld; te;J Nrh;e;jhh;.

1960 – 1972k; Mz;L tiuahd fhyg;gFjpapy; fhyQ;nrd;w gpugy vOj;jhsh;> ,yf;fpathjp> r%f Nrtfh;> ftpQh; K jsarpq;fk; mth;fsplk; Kiwg;gb rPluhdhh;.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டத் தொடர்: மூன்றாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது


போர்க்குற்றச்சாட்டுகளுக்கு ஆணைக்குழு அறிக்கை மூலம் தீர்வு கிடைக்கப்போவதில்லை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்


இலங்கை இராணுவத்தினால் புரியப்பட்ட மோசமான போர்க்குற்றங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கான முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தவறியுள்ளது என நியுயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவோ அல்லது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை அரசின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.
சுதந்திரமான அனைத்துலக விசாரணக்குழுவின் தேவையை இது உணர்த்துவதாக உள்ளது........... read more 

வாய் துர் நாற்றம் – சரி செய்வது எப்படி?


வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?
சிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம் நம் முகத்தில் அடிக்கும், மூக்கைத் துளைக்கும். அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.
சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen sulfide, குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan, கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன. இவைகள் Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கபடுகின்றன.

லண்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் மீது தீவிர விசாரணை

லண்டன் ஸ்ரான்ஸ்ரெட் விமான நிலையத்தில் இருந்து நாடுகடத்தப் பட்ட 55 இலங்கையர்கள் மீது கட்டுநாயக்க விமான நிலைய புலனா ய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந் தவர்களில் 48 ஆண்களும் 7 பெண்களும் அடங்குகின்றனர். அவர்கள் பதுளை, யாழ்ப்பாணம், கண்டி, வவுனியா, திருகோணமலை, வத்தளைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.

இராணுவத்தைக் காப்பாற்றவே ஆணைக்குழு அறிக்கை வெளியீடு

சுரேஷ் எம்.பி. தெரிவிப்பு
இராணுவத்தினைக் காப்பாற்ற வேண்டும். ஆகவே இராணுவத்தி னைக் காப்பாற்றுவதற் கான நடவடிக்கையினை என்ன என்ன ஆணைக்குழுவினூடாக அரசாங்கம் செய்ய லாம் என்ற போக்கில் கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றது என தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட் டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இத னைக் கூறினார். 

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு ஆணைக்குழு அறிக்கை மூலம் தீர்வு கிடைக்கப்போவதில்லை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்


இலங்கை இராணுவத்தினால் புரியப்பட்ட மோசமான போர்க்குற்றங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கான முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தவறியுள்ளது என நியுயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவோ அல்லது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை அரசின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.
சுதந்திரமான அனைத்துலக விசாரணக்குழுவின் தேவையை இது உணர்த்துவதாக உள்ளது........... read more 

சிறிய அளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அறிக்கையில் தெரிவித்துள்ளமை வேடிக்கையான விடயம் - சனல் 4 தொலைக்காட்சி


வெளியாகியுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்  நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களை குறிவைத்து இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக யுத்த சூனியப் பிரதேசத்தில் இலங்கை இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என அவ்வறிக்கையில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது................ read more 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாத எவரும் ….


1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாத எவரும் இனி வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இதுவரை அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக அதனைப் பெற்றுத் தங்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் குடிமக்களாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படிப் பதிவு செய்யாதவர்கள் எதிர்காலத்தில் நடைபெறும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவோ, வாக்களிக்கவோ தகுதியற்றவர்களாகவே கணிக்கப்படுவார்கள். எனவே, உங்கள் உங்கள் பகுதிகளிலுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளையோ அல்லது அவர்களது அலுவலர்களையோ தொடர்பு கொண்டு விண்ணப்பிப்பதன் மூலம் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்............. read more 

இன்று தேனி மாவட்டத்தில் அண்ணன் சீமான் தலைமையில் முல்லை பெரியார் பிரச்சனையில் கேரளத்தின் இனவெறி அரசியலைக் கண்டித்து உண்ணாவிரதம். அய்யா பழ. நெடுமாறன் துவக்கி வைக்கிறார்!!


இன்று தேனி மாவட்டத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் முல்லை பெரியார் பிரச்சனையில் கேரளத்தின் இனவெறி அரசியலைக் கண்டித்து உண்ணாவிரதம். அய்யா பழ. நெடுமாறன் துவக்கி வைக்கிறார்!
வாருங்கள் தமிழர்களே….. இனத்தின் துயர்துடைக்க…. பேதங்களை மறந்து ஒன்றுபடுவோம்!

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ஐ.தே.க, த.தே.கூ., ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளின் கருத்துக்கள்


நேற்றைய தினம் பாராளுமன்றில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் கருத்துக்கள் தெரிவித்துள்ளன.
யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழு அறிக்கையில் எதுவுமேயில்லை - ஐ.தே.க
 சபையிலும் சில ஊடகங்களிலும் இறுதிக்கட்ட யுத்தத்தில் 10,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனால், இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா வாசித்த அறிக்கை சாராம்சத்தில் அது அடங்கவில்லை. இதன் பின்னணி என்ன, உண்மையென்ன என்பதை அரசாங்கம் வெளியிட வேண்டும். எனவே, இவ்வறிக்கையை நன்றாக ஆராய்ந்த பின்னரே ஐ.தே.க நிலைப்பாட்டை வெளியிட முடியும் என்றார்........... read more 

ஒன்றரை லட்சம் பேர் பேரணி கேரள தமிழர் மீது தாக்குதலை கண்டித்து குலுங்கியது கம்பம்!!


முல்லைப் பெரியாறு விவகாரத்தில், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கம்பத்தில் ஒன்றரை  லட்சம் பேர் நேற்று பேரணி நடத்தினர்.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள உடும்பன்சோலை, நெடுங்கண்டம், பாரத்தோடு, காரித்தோடு, சேரியர், காந்திபாறை, ராஜாபாறை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் மீது நள்ளிரவில் திடீரென  தாக்குதல் நடத்தப்பட்டது. ............ read more 

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பானதாகவே அமைந்துள்ளது - அனைத்துலக மன்னிப்புச்சபை

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பானதாகவே அமைந்துள்ளது - அனைத்துலக மன்னிப்புச்சபை

சிறிலங்காவில் பிரச்சினைகள் இருப்பதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஒப்புக்கொண்டுள்ள போதும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மோசமான குற்றங்கள் குறித்த சான்றுகளையும் போர் தொடர்பான ஏனைய சட்டமீறல்களும் இந்த அறிக்கையில் அலட்சியம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை கூறியுள்ளது.


நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சரீபி, ............. read more 

கருணா, இனியபாரதி, ஈபிடிபி உறுப்பினர்கள் மீது முழுமையான விசாரணை நடத்த வேண்டும்- நல்லிணக்க ஆணைக்குழு


சட்டவிரோத ஆயுதக் குழுக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படுவதுடன், இக்குழுக்களின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (16.12.2011) சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது................. read more 

வழிபாட்டு தலங்களை தகர்த்து மீண்டும் எமது போராட்ட முகத்தை பார்க்க அரசு ஆசைப்படுகிறதா?! யோகேஸ்வரன் பா.உ


சிங்கள இனவெறியர்களால் திட்டமிட்டு ஆலயத்தை மதியாமலும் அப்பாவி இளைஞர்களை காட்டுமிராண்டித்தனமாகவும் தாக்கியது எமது போராட்ட முகத்தை இவ் அரசு பார்க்கக ஆசைப்படுகிறதா என பாராளுமன்றில் யோகேஸ்வரன் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்
இச்சம்பவம் தொடர்பில்  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.உ சீ.யோகேஸ்வரன் விடுத்துள்ள கண்டன அறிக்கை:பழமையும் எம் சமூகம் வாழ்வின் அடையாளமுமாக கேகாலை, எட்டியாந்தோட்டையில் இருந்த இந்து ஆலயம் திட்டமிட்டு சிங்கள இனவெறி இளைஞர்கள் தாக்கியுள்ளமையுடன் எமது இளைஞர்கள் ஐவர் நன்கு திட்மிட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்................... read more 

மனிதகுலத்துக்கு எதிரான மோசமான குற்றங்கள் குறித்து அலட்சியம் - சர்வதேச மன்னிப்புச்சபை


மனிதகுலத்துக்கு எதிரான மோசமான குற்றங்கள் குறித்து அலட்சியம் - சர்வதேச மன்னிப்புச்சபை

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மோசமான குற்றங்கள் குறித்த சான்றுகளையும் போர் தொடர்பான ஏனைய சட்டமீறல்களையும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் அலட்சியம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது............ read more 

தனது தாலிக்கொடியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக அன்பளிப்புச் செய்த தமிழ்த்தாய்



நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் அமர்வின் மூன்றாம் நாள் நிகழ்வின் போது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குப் பங்களிப்பு செய்யுமுகமாக பாராளுமன்ற சபையில், திருமதி ராணி ஜெயலிங்கம் தனது தாலிக்கொடியைக் கழற்றி அன்பளிப்பாக வழங்கினார். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது............. read more 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டத் தொடர்: மூன்றாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று மூன்றாவது நாளாக (16-12-2011) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அமெரிக்காவின் பவலோ நகரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்றம் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமவேளை பிரானஸ் - பிரித்தானிய ஆகிய நாடுகளில் இருந்து ஒரு தொகுதி அவை உறுப்பினர்கள் இணையவழி காணொளிப் பரிவர்த்தனையூடாக பங்குபற்றி வருகின்றனர்............. read more 

மனித உரிமை தினத்திலேயே ஆள் கடத்தி இலங்கையில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது - மனோ கணேசன்

யாழ்ப்பாணத்தில் கடத்தலுக்கு எதிராக போராடிய சாத்வீக போராளிகள்  இருவர் கடத்தப்பட்டுள்ளார்கள். அந்த இருவரும்  முன்னமே நடந்துள்ள கடத்தல்களை  எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள். அதுவும் சர்வதேச மனித உரிமை தினத்திலேயே அவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என யாழ்ப்பாணத்தை  ஆட்சி செய்யும் ராணுவம் சொல்கிறது. கடத்தப்பட்டவர்கள் எங்கேயாவது தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அரசாங்க ஊடக பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெல்ல சொல்கிறார்.உண்மையில் இது இவ்வருட இறுதியில் இந்நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ள மாபெரும் அரசாங்க சாதனை............. read more 

இலங்கை அரசின் குட்டுகளை வெளியிடும் சனல் 4ன் செய்தி !

வெளியாகியுள்ள கற்றுக்கொண்ட பாடத்திற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களை குறிவைத்து இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக யுத்த சூனியப் பிரதேசத்தில் இலங்கை இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என அவ்வறிக்கையில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறிய அளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளமை வேடிகையான விடையம் என சனல் 4 தொலைக்காட்ச்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐ.நாவின் அறிக்கையை அது இணைத்து சில ஆதாரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது............. read more 

தமிழ் அரசியல்வாதிகளும் இனி சும்மா கூலிக்கு மாரடிக்க கூடாது

யாழ்ப்பாணத்தில் கடத்தலுக்கு எதிராக போராடிய சாத்வீக போராளிகள் இருவர் கடத்தப்பட்டுள்ளர்கள். அந்த இருவரும் முன்னமே நடந்துள்ள கடத்தல்களை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள். அதுவும் சர்வதேச மனித உரிமை தினத்திலேயே அவர்கள் கடத்தப்பட்டுள்ளர்கள்..........  read more 

Friday 16 December 2011

திருமலை கடற்படைத்தளத்தில் இரகசியத் தடுப்பு முகாம்கள்..

திருகோணமலை கடற்படை முகாம் அமைந்துள்ள வளாகத்தில் இரகசியத் தடுப்பு முகாம்கள் இயங்கிவருகின்றன என்று தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது காணாமற்போனோரைத் தேடியறியும் குழு.

லண்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்களை CID விசாரணை !


இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோரிய 55 இலங்கையர்கள் அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டு இன்று காலை 11.25 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. பிரித்தானிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் விசேட விமானம் ஒன்றின் ஊடாக இவர்களை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர். இவ்வாறு பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்டுள்ள 55 பேரில் 48 ஆண்களும் 7 பெண்களும் அடங்குகின்றனர். இவர்களில் 39 தமிழர்கள், 9 முஸ்லிம்கள் மற்றும் 7 சிங்களவர்கள் அடங்குகின்றனர்.

கவனத்தை திசை திருப்ப 13ம் திருத்தச்சட்டத்தை பாவித்த ஸ்ரீலங்கா:விக்கிலீக்ஸ் !

கவனத்தை திசை திருப்பும் நோக்கில் இலங்கை அரசாங்கம் 13ம் திருத்தச் சட்ட மூலத்தை பயன்படுத்தியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா ஆகியோர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளனர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜதந்திரத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது - அறிக்கை இணைப்பு


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த மோதல்களின் போது அரச பாதுகாப்பு படையினர் செயற்பட்ட விதம் குறித்து மகிழ்ச்சி.  அடைவதாக ஜனாதிபதியால் நியாமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழர் பிரச்சினைக்கு அதிகார பகிர்வு அவசியம் - நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை


இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் இலங்கை இராணுவம் பொதுமக்கள் தரப்பில் உயிர் இழப்பை தவிர்க்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்ததாக இலங்கைப் போரின் இறுதிக் கட்ட நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த, இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட, படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Gjpa kfrpd; rpiwr;rhiyapy; gphpj;jhdpa gpuir jhf;fg;gl;Ls;shh;

Gjpa kfrpd; rpiwr;rhiyapy; gphpj;jhdpa gpuir jhf;fg;gl;Ls;shh;

Gjpa kfrpd; rpiwr;rhiyapd; N[ gphptpy; jLj;Jitf;fg;gl;Ls;s GNyhyp gUj;jpj;Jiw aho;ghzj;ij gpwg;gplkhff; nfhz;l ,uz;L gps;isfspd; je;ijahd tp];typq;fk; Nfhgpjh]; vd;w FLk;g];jh; ,d;W rpiwr;rhiy mjpfhhpfspdhy; jhf;FjYf;F cs;shdjhd mwptpf;fg;gl;Ls;sJ.

gphpj;jhdpa FbAhpik ngw;Ws;s ,th; fle;j 03.04.2007 ,y; nfhOk;G tpkhd epiyaj;jpy; itj;J tpLjiyg; GypfSld; njhlh;Gfis itj;jpUe;jhh; vd;w re;Njfj;jpd; Nghpy; Fw;wg; Gydha;T gphptpduhy; ifJnra;ag;gl;L Gjpa kfrpd; rpiwr;rhiyapy; jLj;J itf;fg;gl;Ls;shh;.

திங்கள் மாலை இவர்கள் இருவரும் கடத்தப்பட்டதை எதிர்த்து பிரித்தானிய இலங்கைத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது


மகிந்த ராஜபக்ச அரச படைகளால் கடத்தப்பட்ட மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ். அமைப்பாளர் லலித் குமார வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் யாழ். அச்சுவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை(15.12.2011) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடமாகாண உள்ளூராட்சி சபைகளை மேம்படுத்த இந்தியா உதவ வேண்டும்; மாவை சேனாதிராசா கோரிக்கை



வடக்கில் உள்ள உள்ளூராட்சி கபைகளை ஜனநாயக ரீதியாக மேம்படுத்துவதற்கும், அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் இந்திய அரசு உதவி புரிய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா யாழ்ப்பாணம் வந்திருந்த இந்தியக் குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார்.

Thursday 15 December 2011

TGTE 3rd Parliament - Siobhain McDonagh British MP


தமிழ்தேசியக்கூட்டணி "ஒன்றிணைந்த" மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றுவது சரியா தவறா?

தமிழ்தேசியக்கூட்டணி "ஒன்றிணைந்த" வடக்குக்கிழக்கு மாகாணத் தேர்தலில் பங்குபற்றுவதுதான் சரியானது. 

1995ம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற பாரிய இடப்பெயர்வுக்குப்பின் இன்றுவரை யாழ்ப்பாணம் எமது கையில் இல்லை.ஏறைகுறைய 17 ஆண்டுகள் யாழ்ப்பாணம் சிங்களவனின் கையில். அன்று நாம் ஆயுத பலத்துடன் இருந்தும்கூட மீட்கமுடியவில்லை. இன்று புலம்பெயர்ந்த‌ நம்மிடம் நம்பிக்கையைத்தவிரவேறொன்றும் இல்லை. தாயகத்திலுள்ளவர்களிடம் அந்த நம்பிக்கைகூட இல்லை. 



அவர்களிடம் எஞ்சி இருப்பது வாக்குரிமை ஒன்றுதான். இதை இழப்போமானால் அல்லது  தேர்தலைப் புறக்கணிப்போமானால் வடக்குக்கிழக்கில் தமிழன் என்ற ஒரு இனமே இருக்காது. சிங்களவனின் பெரும்பான்மைக் குடியேற்றத்தினால், நீர்கொழும்பு, சிலாபம் போன்று யாழ்மக்களும் சிங்களத்தையே தாய்மொழியாக்கி அசல் சிங்களவர்களாகவே மாறிவிடுவார்கள்.

Oh My God, I could not stop crying. நாம் என்ன தவறு செய்தோம் தமிழனாக இலங்கையில் பிறந்தது எம் தவறா?? இதற்காகவா எங்களுக்கு இந்தத் தண்டனை???????

 
இதை கேட்டால் கண்ணீர் வருமா உங்களுக்கு ..கேளுங்கள் தமிழர்களே .

ஹர்மொண்ட் சிறைச்சாலைக்கு வெளியே வேற்றின மக்கள் தமிழர்களுக்காகப் போராட்டம் !


ஹர்மொண்ட் சிறைச்சாலைக்கு வெளியே வேற்றின மக்கள் தமிழர்களுக்காகப் போராட்டம் !

லண்டனில் உள்ள ஹர்மொண்ட் சிறைச்சாலைக்கு வெளியே வேற்றின மக்கள் தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது எனப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இச் செய்தி தமிழ் ஊடகங்களில் பரவியதால் பல தமிழர்கள் அச் சிறைச்சாலை நோக்கிப் புறப்பட்டுச் சென்று தாமும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். முதலில் போராட்டத்தை ஆரம்பித்த வெள்ளையின மக்கள் தமது கைகளை பாரிய இருப்புக் கம்பிக்ளில் தாமே விலங்கிட்டுக் கொண்டனர். இதனால் பொலிசாரால் அவர்களை அங்கிருந்து இலகுவாக அகற்ற முடியவில்லை. இதற்கும் ஒரு படி மேலே போய் சில வெள்ளையின மக்கள் கம்பிகளைக் கட்டி அதன்மேல் ஏறி நின்று ஆர்பாட்டத்தை நிகழ்த்தினர். இதனால் அவர்களை கீளே இறக்க முடியாமல் பொலிசார் திண்டாடிப்போனார்கள்.

ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்

15.12.1995 அன்று ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாடு திருச்சியில் தன்னையெரித்து ஈகைச்சாவடைந்த அப்துல் ரவூப் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார்.

நத்தார், புதுவருடம் என்று நாம் கொண்டாடும் வேளையில் எமது தாயகத்தில் இருக்கும் எமது சிறுவர்களுக்கும் உதவும்படி வேண்டி நிற்கிறோம்

நத்தார், புதுவருடம் என்று நாம் கொண்டாடும் வேளையில் எமது தாயகத்தில் இருக்கும் எமது சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் முன் வந்து உதவும்படி வேண்டி நிற்கிறோம்!

நாமும் அங்கிருந்தால் கை, கால், கண், பெற்றோர், சகோதர்களை  இழந்திருபோம்.  எமக்கு யாரும் உதவ மாட்டார்களா என்று ஏங்கிக்  கொண்டிருப்போம்!

ஆகையால் தயவு செய்து ஒவ்வொருவரும் பணத்தை செலவு செய்யும்போது 
அதில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி உதவ முன் வரவேண்டும்! 

சர்வதேச சமூகத்திடம் சரணாகதி அடையும் நிலையில் மஹிந்த அரசு!; கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன


வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்றார்கள் எனக் கூறப்படுபவர்களுக்கும், இறுதி யுத்தத்தின் போது பொது மக்களைப் படுகொலை செய்தார்கள் எனக் கூறப்படுபவர்களுக்கும் மஹிந்த அரசு வெளிநாட்டுத் தூதுவர் பதவிகளை வழங்கி அழகுபடுத்திப் பார்க்கின்றது இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்கள் ஆகியவை உள்ளடக்கப்படாத தீர்வுத்திட்டமானது முழுமையானதொரு தீர்வுப் பொதி யாக அமையாது.” இவ்வாறு நவ சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும், தெஹிவளை கல்கிசை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன “உதயனு’க்கு வழங்கிய விசேட செவ்வியின் போது தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் ஊடக அடக்கு முறை உண்மைகளை வெளியிட்டால் ஆபத்து; இதுதான் அரசு வழங்கிய சுதந்திரம் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில்


யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக அடக்கு முறை அதிகரித்துள்ளது. சுதந்திரமாக ஒரு பத்திரிகை தனது கருத்தை வெளியிடமுடியாது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக நடமாடவும் முடியாத நிலை. இது தான் இந்த அரசு ஏற்படுத்திய ஊடக ஜனநாயகம். இன்று யாழ்ப்பாணத்தின் உண்மை நிலையை அறிய முடியாது.

இன்று திசம்பர் 15

1941 - பெரும் இனவழிப்பு: உக்ரேனின் ஆர்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாட்சிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

1995 - ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் "அப்துல் ரவூஃப்" என்பவர் தீக்குளித்து இறந்தார். 

2006 - இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் (http://tawp.in/r/hxd) கொழும்பில் இனம் தெரியாதோரால் கடத்தப்பட்டார். இன்று வரையில் விடுவிக்கப்படவில்லை. 

தமிழர்களை சிறீலங்காவிற்கு திருப்பியன்யநுப்ப வேண்டாம் எனக்கோரி சிறைச்சாலையின் முன் வீதிமறிப்பில் ஈடுபட்டோர் கைது!


தமிழர்களை சிறீலங்காவிற்கு திருப்பியனுப்ப வேண்டாம் எனக்கோரி இன்று (15-12-2011) சிறைச்சாலையின் முன் வீதிமறிப்பில் ஈடுபட்டோரை பிரித்தானியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

இன்று பிரித்தானியாவில் இருந்து 50 இலங்கையர்களை நாடுகடத்துவதற்காக கீத்துறூ விமான நிலையத்துக்கு அருகாமையில் உள்ள சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த வேளையிலேயே ACT NOW அமைப்பினரால் அச்சிறைச்சாலையின் முன் திடீர் வீதிமறிப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. 

9 பேர் மட்டும் துணிச்சலாக மேற்கொண்ட இப்போராட்டத்திற்கு ஆதரவு வேண்டி கைத்தொலைபேசி ஊடாக குறும் தகவல் செய்திகள் அனுப்பப்பட்ட போதும் போதிய மக்கள் அவ்விடத்திற்க்கு செல்லாத காரணத்தால் மக்கள் பலமின்றிய போராட்டத்தை இலகுவாக பிரித்தானியக் காவல் தூறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்துள்ளதோடு,  நாடுகடததுவதற்காக  அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை பின் வாசல் வளியாக விமான நிலையம் அழைத்துச்செல்லப்பட்டும் உள்ளனர். 

அவசர வேண்டுகோள்: பிரித்தானிய தமிழர்களே உதவுவீர்களா ?


அவசர வேண்டுகோள்: பிரித்தானிய தமிழர்களே உதவுவீர்களா ?

லண்டனில் இருந்து 50க்கும் மேற்பட்ட தமிழர்களை தனி விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானியா முயல்கிறது. இதனை தடுக்க வேற்றின மக்களுடன் சில தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தடுப்பு முகாமில் இருந்து திருப்பி அனுப்ப என ஒரு தொகுதி தமிழர்களை ஏற்றியவாறு வெளியே வந்த பேரூந்து ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் வழிமறித்து அதனைச் சூழ்ந்துகொண்டனர். இதனால் அதன் சாரதி எதனையும் செய்யமுடியாது பேரூந்தை திரும்பவும் தடுப்பு முகாமுக்குள் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் வேறு வழியாக இவர்களை பிறிதொரு பேரூந்தில் ஏற்றி விமானநிலையம் கொண்டு செல்ல பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் முனைவதாக போராட்டத்தை நடத்தும் சில தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்று மாகாண சபை முறமையை எதிர்த்தவர்கள் இன்று மாகாணசபையை கைப்பற்ற ஆசைப்படுவது ஏன் - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்.


அன்று மாகாண சபை முறமையை எதிர்த்தவர்கள் இன்று மாகாணசபையை கைப்பற்ற ஆசைப்படுவது ஏன் - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்.

அன்று மாகாண சபை முறமை மூலம் கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டபோது கிழக்கு மாகாணசபையை வெறுத்தவர்கள், எதிர்த்தவர்கள் இன்று மாகாணசபையை கைப்பற்றுவதற்கு கனவு காண்பதன் நோக்கம் என்ன? இவ்வாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் அவர்கள் மட்ஃமுனைக்காடு விவேகானந்தா வித்தியாலத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்............. read more

விபச்சாரம் தலைவிரித்தாடும் மட்டக்களப்பு


விபச்சாரம் தலைவிரித்தாடும் மட்டக்களப்பு

யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக பரவலாகப் பேசப்பட்டு வரும் இவ்வேளையில் இவ்வாறான கலாசார சீர்கேடுகள் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தல் பரவலாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறுகின்ற இவ்வாறான செயற்பாடுகள் வெளிவருவதில்லை. இவற்றுக்கு காரணம் கிழக்கிலே இடம்பெறும் இவ்வாறான செயற்பாடுகளை வெளியிடுவதற்கு ஊடகம் இல்லை என்றே சொல்லலாம். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இவ்வாறான சமூக சீர்கேடுகளை வெளியிடுவதில் ஊடகங்கள் பாரிய பங்கு வகிக்கின்றன........... read more 

சிங்கள ஆக்கிரமிப்பின் மற்றொரு நகர்வு - முல்லைத் தீவு நகர் சிங்களமயமாகுமா?



சிங்கள ஆக்கிரமிப்பின் மற்றொரு நகர்வு
 - முல்லைத் தீவு நகர் சிங்களமயமாகுமா?


சிங்கள மீனவர்களுக்கு முல்லைத்தீவு சென்று அங்குள்ள கடற்பரப்பில் மீன்படி தொழிலில் ஈடுபட வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என சமூக நலன்புரி அமைச்சர் மில்ரோய் பெனாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். ......... read more  

50 தமிழ் அகதிகளை நாடு கடத்தும் பிரித்தானியா

பலவந்தமான முறையில் 50 இலங்கை புகலிடக் கோரிகையாளர்கள் பிரித்தானியாவிலிருந்த நாடு கடத்தப்பட உள்ளதாகத் ‘கார்டியன்‘ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய எல்லை முகவர் நிலையத்தினால் பலவந்தமான முறையில் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Wednesday 14 December 2011

இலங்கையில் போர் முடிவடைந்தும் அரசியல் போர் இன்னும் முடிவிற்கு வரவில்லை!! - பிரிட்டன் நாளேடு

இலங்கையில் போர் முடிவடைந்தும் அரசியல் போர் இன்னும் முடிவிற்கு வரவில்லை!! - பிரிட்டன் நாளேடு

இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது. விடுதலைப்புலிகள் தோல்வியடைந்து விட்டனர். ஆனாலும் அரசியற் தீர்வு பற்றிய எந்தச் சமிக்ஞையையும் இலங்கையில் காண முடியவில்லை - என்று பிரிட்டன் நாளேடான “இன்டிபென்டன்ட்” செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1995 தொடக்கம் போரின் இறுதிக் கட்டம் வரை – போர் சாராத வேறு பணிகளில் ஈடுபட்ட மூத்த அதிகாரி ஒருவரே இவ்வாறு கூறினார் என்று அதில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது......... read more 

நோக்கு வர்மம் - ஆர். நடராஜ்

ஐக்கிய நாடுகள் சபை புத்தாயிரத்தில் மக்கள் முன்னேற்றத்துக்கு உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய புத்தாயிர இலக்குகள் ஒன்று நிர்ணயித்தது. வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், மனித உரிமைகள் பாதுகாப்பு போன்றவை இதில் அடங்கும். "மில்லனியம் கோல்ஸ்' என்ற இந்த இலக்குகள் 2015-க்குள் எட்டப்பட வேண்டும். அதற்கு எல்லா நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஒருமைப்பாட்டை சிதைத்து விடாதீர்கள்! பழ. நெடுமாறன்

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று குரலெழுப்பி, மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைத்த கேரள அரசியல்வாதிகளுக்கு, உச்ச நீதிமன்றம் தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்கிற கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்திருப்பதுடன், கேரள அரசு குறிப்பிட்டிருப்பதுபோல, நில அதிர்வுகளால் அணைக்கு ஆபத்து என்கிற கருத்தையும் நிராகரித்திருக்கிறது.

கேரளத்திலிருந்து தமிழ்க் குடும்பங்கள் விரட்டியடிப்பு?


கேரள மாநிலம் உடும்பஞ்சோலைப் பகுதியில் கேரளத்தினரால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழ்க் குடும்பங்கள்.


போடி, டிச. 14: கேரளத்திலிருந்து 40 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. மேலும், கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வசிக்கும் தமிழர்கள், கேரள அரசை எதிர்த்து ஊர்வலமாக சென்றனர்.

நாம் ஒன்றாக இணைந்து உலகை நோக்கி ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போம் 'தமிழீழமே எங்கள் தாகம்' என்று!


சிங்கள அரசுடன் பேசி இலங்கைத் தீவின் இனப் பிரச்சினைக்குத் தீர்வினை எட்டும்படியான இந்தியா முதற்கொண்ட சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு ஏமாற்ற அனுபவத்தைப் பெற்றுள்ளது.
இதுதான் நடக்கும் என்ற எதிர்பார்ப்புடனும் உளக் குமுறலுடனும் காத்திருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு இது எந்த வகையிலும் ஏமாற்றத்திற்குரியது அல்ல............ read more

புலம் பெயர் தமிழருக்கு புலமைப்பித்தனின் மடல்..

அன்பார்ந்த என் தமிழ் உறவுகளே…
நடந்து முடிந்த நான்காவது ஈழப்போர பேரவலத்தின் ஒரு சாட்சியத்தை ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் என்னுடைய அருமை நண்பர் புகழேந்தி தங்கராஜ்.


சராசரியாக தமிழ் நாட்டில் நுர்ற்றுக்கணக்கான திரைப்படங்கள் வந்து போயிருக்கின்றன. எழுபத்தைந்து ஆண்டுகளாக வெளிவந்த திரைப்படங்கள் பலவற்றிலும் நான் இதை வேறு கோணத்தில் உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம்பார்க்கின்றேன். . அதில மாற்றுக் கருத்து ஏதுமில்லை. . ரத்தத்தோடு கலந்த ரத்தத்தை கொதிக்க வைக்கின்ற தமிழின போராளி என்ற பார்வையிலே மட்டும்தான் இந்த படத்தை பார்க்கிறேன்................ read more 

கைதானவர்களின் மீது அக்கறை செலுத்த வேண்டும்-சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்.

கைதிகளின் நலன் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறைச்சாலைகளில் அதிகளவான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு நெரிசல் மிக்க சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பல்வேறு இன்னல்களையும், இடர்களையும் எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளைப் பொறுப்பாளர் யோவிஸ் கியோவனோனி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விடயங்கள் ........ read more 

வடக்கு கிழக்கு தாயகத்தை பிரிக்கக் கூறுவோர் சிங்களத்தின் எடுபிடிகளே அன்றி தமிழ் பேசும் சமூகத்தினர் அல்ல!– சீ.யோகேஸ்வரன்


சிங்கள அமைச்சரவை எடுபிடிகளான பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா போன்றவர்களின் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான கருத்து அரசியல் வங்குரோத்து தன்மையையே காட்டுகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேறு எந்த ஆக்கபூர்வமான செயற்பாடாகவும் அமையாது. எமது உயிர் மூச்சாம் வடக்கு கிழக்கு தாயக இணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. வட, கிழக்கு பிரிப்பால் எமது தமிழ் பேசும் சமூகம் கண்டுள்ள இன்னல்களை எல்லோரும் நன்கறிவர்................... read more