Translate

Friday 16 December 2011

திங்கள் மாலை இவர்கள் இருவரும் கடத்தப்பட்டதை எதிர்த்து பிரித்தானிய இலங்கைத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது


மகிந்த ராஜபக்ச அரச படைகளால் கடத்தப்பட்ட மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ். அமைப்பாளர் லலித் குமார வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் யாழ். அச்சுவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை(15.12.2011) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று யாழில் காணாமல் போன லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் போயுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் திங்கள் மாலை இவர்கள் இருவரும் கடத்தப்பட்டதை எதிர்த்து பிரித்தானிய இலங்கைத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment