Translate

Saturday 7 July 2012

நாத்திகர் வாக்கு பலித்தது....

கவிஞர் வாலி அப்போல்லோவில் பைபாஸ் சர்ஜரி முடித்து அய்.சி .யு வில் இருந்து மீண்டு இருந்த போது ஊரறியாத விஷயம் ஒன்று உண்டு.
கவிஞர் வாலி கூறுகிறார்...
என் suite இல் படுத்திருந்தேன் Artificial Respiration க்காக என் வாய் வழி விடப்பட்ட Ventilator Apparatus .

‘நான் ஏன் பிறந்தேன் என்ற எம்.ஜி.ஆரின் சுயசரிதை புத்தகம் ஜானகியின் மகனுக்குத்தான் சொந்தம்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

 
வி.என்.ஜானகி& கணபதி பட் தம்பதியின் மகன் சுரேந்திரன். கணபதி பட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று எம்.ஜி.ஆரை 2&வதாக ஜானகி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற சுயசரிதையை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். இதை அச்சடித்து விற்கும் உரிமையை சுரேந்திரன் பெற்றிருந்தார்.

தாம்பரம் விமான தளத்தில் இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கப் படுவது குறித்துத் தமிழ்நாட்டில் பூகம்பம் வெடித்துக் கிளம்பியது.

 
தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி., உள்பட பலரும் தங்கள் அதிருப்தியையும், எதிர்ப்பையும், தெரிவித் துள்ளது வரவேற்கத்தக்கது.

இலங்கை சிறையில் தமிழர் கொலை: வைகோ, சீமான் கண்டனம்


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

இலங்கை சிறையில் தமிழர் கொலை: வைகோ, சீமான் கண்டனம் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் வேகமாக நடைபெற்று வருகிறது. சிங்களப் போலீசாரும், ராணுவமும் தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டு, தமிழர் பூமி துன்புறுத்தும் வதைக்கூடம் ஆகிவிட்டது. இச்சூழலில் வவுனியா சிறைச்சாலையில் இருந்த தமிழர் கைதிகளை துன்புறுத்தி அனுராதபுரம் சிறைச் சாலைக்கு சிங்கள சிறைத்துறை அதிகாரிகளும், காவலர்களும் மாற்ற முயன்றதை தமிழர்கள் எதிர்த்ததால் அவர்களைப் படுமோசமாகத் தாக்கி அனுராதபுரம் சிறைச் சாலைக்குக் கொண்டு சென்று அங்கும் அவர்களை காட்டு மிராண்டித் தனமாகத் தாக்கி உள்ளனர். 

தமிழர் தாயகத்தில் சிங்கள படைகளால் தொடரும் படுகொலைகளுக்கு தமிழர் நடுவம் டென்மார்க் கண்டனம்


வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு அங்கே மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியான கணேசன் நிமலருபனின் படுகொலைக்கு தமிழர் நடுவம் டென்மார்க் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழர் நடுவம் டென்மார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளைக் கொன்றோம் - இலங்கை ராணுவ மந்திரி கோத்தபயாவின் ஒப்புதல் வாக்குமூலம்..! ஈழதேசம் செய்தி ..!

Posted Imageயுத்தத்தில் சரணடைந்த மற்றும் பிடிபட்ட விடுதலைப்புலிகளை கொல்லுமாறு ராணுவ தளபதிகளுக்கு உத்திரவிட்டேன். இந்த உத்தரவை மீறிய ஒரு சில தளபதிகளால் தான் தற்பொழுது பிரச்சனையே எழுந்துள்ளது என்கிறார் இலங்கையின் ராணுவ ஆலோசகரும் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே அவர்கள்.
லங்கா நியூஸ் வெப் என்ற இணைய தளத்தில், இலங்கையின் பாதுகாப்பு செயலர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேஜர் ஜெனரல் பிரசன்னா சில்வா எனது உத்தரவை ஏற்க மறுத்ததால் தான் கடந்த வார வவுனியா சிறை நாடகம் நடந்துள்ளது என்றார்.

ஆகஸ்ட் 12ம் தேதி டெசோ மாநாடு: சென்னையில் நடத்த கருணாநிதி முடிவு


சென்னை: விழுப்புரத்தில் நடத்த திட்டமிட்டிருந்த, தமிழ் ஈழ ஆதரவு (டெசோ) மாநாட்டை சென்னையில் நடத்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி முடிவு செய்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 5ம் தேதி, இம்மாநாட்டை விழுப்புரத்தில் நடத்த முன்னதாக, தி.மு.க., திட்டமிட்டிருந்தது. இப்போது இம்மாநாடு, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திடலில், ஆகஸ்ட் 12ம் தேதி நடத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளது. மாநாட்டில் இலங்கை உட்பட பல நாடுகளில் இருந்தும், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருந்தும் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். எனவே, இம்மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. மாநாட்டின் வரவேற்புக் குழுவில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பொன்முடி, ஏ.வ.வேலு, ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பாலு ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, காஷ்மீரைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மே.வங்க முதல்வர் மம்தா, மத்திய அமைச்சர் சரத்பவார், இலங்கை எம்.பி., சம்மந்தம் மற்றும் விடுதலைப் புலிகள், டெலோ போன்ற தமிழ் ஈழ விடுதலை அமைப்புகளின் முன்னணி பிரமுகர்கள் ஆகியோருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதியே நேரடியாக அழைப்பு அனுப்பியுள்ளார்.

மிக மோசமான அதி உச்சக்கட்ட அடிப்படை மனித உரிமை மீறல் கைதியின் உடலை வழங்க மறுத்தமை குறித்து நாடாளுமன்றத்தில் சம்பந்தன் நேற்று காட்டம்


news
 ”தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து கொலை செய்யாது அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும். தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் கொலை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதோடு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.''
 
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றியபோது மிகவும் காட்டமாகத் தெரிவித்தார். 

சிறப்பு முகாம்களை மூடக்கோரி 10 ஆம் திகதி முற்றுகைப் போராட்டம்: சீமான் _


  சிறப்பு முகாம்களை மூடக்கோரி செங்கல்பட்டு சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்பில் சர்வதேச சமூக பிரதிநிதிகள் அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டும்: மனோ


கணேசன் நிமலரூபன் மரணத்தை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடிப்படையாக கொண்டு கொழும்பு, நீர்கொழும்பு, மஹர, யாழ்ப்பாணம், அனுராதபுரம், கண்டி, களுத்துறை ஆகிய அனைத்து சிறைசாலைகளிலும் பூசா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள

ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்கிறது அமெரிக்கா – விக்கிலீக்ஸ்


விசேட மொழியாக்கம் குளோபல்தமிழ்ச்செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்கிறது அமெரிக்கா – விக்கிலீக்ஸ்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
 
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறிப்பில் இந்த விடயம்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹரிஹரனின் இலங்கை நிகழ்ச்சி ரத்து


ஹரிஹரனின் இலங்கை நிகழ்ச்சி ரத்து
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக இலங்கைவரவிருந்த இந்தியப் பாடகர் ஹரிஹரனின் விஜயம் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

SP யின் காலில் விழுந்து அவரின் சப்பாத்தை நக்குமாறு கூறிய அதிகாரிகள் !

வவுனியா சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது அதிஉச்ச சித்தரவதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்கள் மிகக் கொடுரமாக தாக்கப்பட்ட பின்னரே வைத்தியசாலையில் காலம்தாழ்த்தி அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் உள்ளே என்ன நடந்தது என்பது குறித்த சில செய்திகளை naam veLiyidukiRoom.

அடாவடித்தனத்தை காட்டி தனக்கு தானே கரிபூசிய யாழ். அநீதிபதி கணேசராசா


அடாவடித்தனத்தை காட்டி தனக்கு தானே கரிபூசிய யாழ். அநீதிபதி கணேசராசா

யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் காணிகளை படையினர் அபகரிப்பதற்கு துணைபோகும் வகையில் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு தடை செய்து சிங்கள பேரினவாத அரசின் கைக்கூலியாக செயற்படும் யாழ். அநீதிபதி கணேசராசா தனக்கு தானே கரிபூசிக்கொண்டார்.

நவநீதம்பிள்ளையின் கையில் சிக்கியிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் குடுமி…………..!


நவநீதம்பிள்ளையின் கையில் சிக்கியிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் குடுமி…………..!

சிங்களத் தேசியவாத சக்திகளை திசைதிருப்பும் உத்தி பலிக்குமா?
  • ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவை அரசாங்கம் இலங்கைக்குள் அனுமதிக்க இணங்கும் முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அலுவலகத்தில் இருந்து வரும் அதிகாரிகளை இலங்கை அரசாங்கம் எதிர்க்காது- அவர்களை வரவேற்கும் என்று, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கடந்தவாரம் கூறியிருந்தனர். அந்தச் செய்தி வெளியாகி பல நாட்களாகியும் அரசாங்கத்திடம் இருந்து அதற்கு எதிர்ப்போ நிராகரிப்போ வரவில்லை. எனவே, இந்த செய்தி பொய்யானது அல்ல என்பதை உறுதி செய்ய முடிகிறது. ஏனென்றால், உண்மையாக இல்லாதிருப்பின் இது அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதொரு செய்தி.

அரசியல் கைதிகளை விடுதலைசெய்யுங்கள் கூட்டமைப்பு நாடாளமன்றத்தில் கோரிக்கை!

அரசியல் கைதிகளை விடுதலைசெய்யுங்கள் கூட்டமைப்பு நாடாளமன்றத்தில் கோரிக்கை!
வழக்குத் தொடராமல் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றில் கோரியுள்ளார்.


தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும் இதுவரையில் விசாரணைகள் துரித கதியில்மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் படுகொலை ராஜபக்சே சொல்லித்தான் செய்தோம் - ஜெகத் ஜெயசூர்யா

முள்ளிவாய்க்கால் படுகொலை ராஜபக்சே சொல்லித்தான் செய்தோம் - ஜெகத் ஜெயசூர்யா
முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந்நாட்டு படை தளபதி ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

வடக்கில் படையினராலும் பௌத்தபிக்குகளாலும் காணிகள்அபகரிக்கப்படுகின்றன – மாவை


வடக்கில் காணிசுவீகரிப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர்கோட்டாபாய ராஜபக்சவின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டியஅவசியம் கூட்டமைப்பிற்குக் கிடையாது எனத் நாடாளமன்றஉறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.படையினராலும்ஆளுநராலும்பௌத்த பிக்குகளி னாலும்காணிகள் அபகரிக்கப்படுவதை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.சர்வதேசத்திற்கும்சிறீலங்கா அரசிற்கும்உச்சநீதிமன்றிற்கும்சொல்லுவோம் எனவும்உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கானதலைமைத்துவ மற்றும் ஆட்சி நிர்வாகப் பயிற்சியில் கலந்துகொண்டு தலமை தாங்கி உரையாற்றும்போதே பாராளுமன்றஉறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

மளங்காடு பகுதியில் குடியேறியிருக்கும் முள்ளிக்குளம் மக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்




மளங்காடு பகுதியில் குடியேறியிருக்கும் முள்ளிக்குளம் மக்களுக்கான அடிப்படைவசதிகள் துரித கதியில் செய்து கொடக்கப்படவேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் S.வினோ நோகராதலிங்கம்  தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மன்னாரில் போராட்டம்!


selvam-adaikalanathan_2

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.மன்னாரில் மீனவர்களுக்குக் கடற்படையினரால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாஸ் நடைமுறை, தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிடப்பட்ட முறையில் அரச தரப்பு மற்றும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு ஆகியவற்றைக் கண்டித்தே மேற்படி சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஆணையைப் பெறுமா சர்வதேசப் பிரகடனம்?

மக்களின் ஆணையைப் பெறுமா சர்வதேசப் பிரகடனம்?
 
இதயச்சந்திரன்
 
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக்கடுமையான வீழ்ச்சியை இந்த வாரம் இலங்கையின் பங்குச் சந்தை எதிர்கொண்டுள்ளது. 
2011 நவம்பரிலிருந்து இற்றைவரை 17.5 சதவீதம் தனது ரூபாய் நாணயத்தின் பெறுமதியை இலங்கை இழந்துள்ளது.

‘வடக்கு மக்களின் வாழ்வில் இராணுவத் தலையீடு‘ – சிவ்சங்கர் மேனன், கோத்தாபய, ஹத்துருசிங்க



சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் வடக்கில் படையினரைக் குறைப்பது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் முக்கியமாக கலந்துரையாடியிருந்தார்.
 இதன்போது வடக்கில் சமூக வாழ்வில் சிறிலங்காப் படையினரின் தலையீடுகளை குறைக்கப்பட வேண்டும் என்று சிவ்சங்கர் மேனன் வலியுறுத்தியிருந்தார்.

பயிற்சி பெறாது இலங்கை வீரர்கள் நாடு திரும்ப மாட்டார்கள்! -இலங்கை அறிவித்துள்ளது.



இலங்கை விமானப் படை வீரர்கள் பயிற்சியின் இடைநடுவே நாடு திரும்ப மாட்டார்கள் என இலங்கை அறிவித்துள்ளது.சார்க் நாடுகளின் விமானப் படை வீரர்களுக்கு 9 மாத தொழில்நுட்ப பயிற்சி சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக இலங்கை விமானப்படை வீரர்கள் ஒன்பது பேர் சென்றிருந்தனர்.

படைஓப்பந்தங்கள் ரத்துசெய்து சிங்கபடை இந்தியாவில் இருந்து வெளியேறவேண்டும்-வைகோ



சிங்களபடையினருடனான அனைத்து ரகசிய ஒப்பந்தங்களையும் ரத்து செய்துவிட்டு சிங்களப் படையினரை இந்தியாவில் இருந்து உடனே வெளியேற்ற வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜூலை 9ம் தேதி 2,50,000 லட்சம் கம்ப்யூட்டர்களை 'காவு' வாங்கப் போகும் வைரஸ்!


பாஸ்டன்: உலகம் பூராவும் இதே பேச்சாக இருக்கிறது. ஜூலை 9ம்தேதி திங்கள்கிழமையன்று உலகம் பூராவும் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் நடைபெறப் போவதாகவும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கம்ப்யூட்டர்கள் காலியாகப் போவதாகவும் அந்த எச்சரிக்கைப் பேச்சு கூறுகிறது.

எந்த பிளாக்கைப் பார்த்தாலும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது. அன்றைய தினம் கம்ப்யூட்டர்களின் பேரழிவு தினம் என்றும் பீதியைக் கிளப்புகிறார்கள்.

நிமலரூபனின் கொலை குறித்த மர்மங்களை மூடிமறைக்க அரசு முயற்சி! - பொன்.செல்வராசா குற்றச்சாட்டு.


நிமலரூபனின் கொலை குறித்த மர்மங்களை மூடிமறைக்க அரசு முயற்சி! - பொன்.செல்வராசா குற்றச்சாட்டு.


சிறிலங்கா சிறைச்சாலை அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் உடலை கொழும்பில் அடக்கம் செய்து, அவரது கொலை குறித்த மர்மங்களை மூடிமறைக்க சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குற்றம் சுமத்தியுள்ளார்.

கோப்பி குடிக்க வந்த இங்கிலாந்து பிரதமரை காக்க வைத்த பெண் ஊழியர்.


லண்டனில் கேன்டீன் பெண் ஊழியர் ஒருவர், அங்கு கோப்பி குடிக்க வந்த இங்கிலாந்து பிரதமரை காத்திருக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆயுதப்படை தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அலுவலக காரில் சென்றார்.

எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணல் (video)


ஆகஸ்ட் மாதம் வந்தால், 50  வயது ஆகிறது தொல்.திருமா வளவனுக்கு. இப்போதே கல்யாணக் கச்சேரியில் இருக்கிறது  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம். ''பொன்விழா நாயகன்னு போஸ்டர் அடிப் பாங்கள்ல!'' என்று கேட்டால், சிரிக்கிறார் திருமா.   ...மேலும் படிக்க 

தொல்.திருமாவளவனுடன் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசினார்.


தொல்.திருமாவளவனுடன் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசினார்.
தொல்.திருமாவளவனுடன் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசினார்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில்
விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவைக் கோரினார்!
இந்தியத் தலைமை அமைச்சர் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை இன்று (7-7-2012) மாலை 5.45 மணியளவில் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, தொல்.திருமாவளவன் அவர்களிடம் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கடசியின் ஆதரவைக் கோரினார்.  இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்பாக்குக் கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பதில் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்தறிய விரும்புவதாகவும் தொல்.திருமாவளவன் அவர்களிடம் மாண்புமிகு மன்மோகன் சிங் கேட்டார்.

Thursday 5 July 2012

பிரிட்டனைப் பார்!


பிரிட்டனைப் பார்!

கிறித்துவ மதத்தவர்கள் அதிகம் வாழும் இங்கிலாந்தில் சர்ச்சுகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன. மத அடிப்படையில் பின்பற்றப்பட்ட பழக்க வழக்கங்களிலும் மாறுதல் புயற்காற்று வீச ஆரம்பித்து விட்டது.
1837 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சம்பிரதாயப்படி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரைதான் திருமணங்கள் செய்யப்பட்டு வந்தன. இதிலும் அதிரடி மாற்றம் இப்பொழுது கொண்டு வரப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் இரவு - பகல் பாராமல் எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முக்கியமாக தேவாலயங்களில், அவை திறந்திருக்கும் எந்த நேரத்திலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

சுமந்திரன் எம்பி, உதயன் ஆசிரியர் பிரேம்நாத் மீது CID விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு


சுமந்திரன் எம்பி, உதயன் ஆசிரியர் பிரேம்நாத் மீது CID விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பிரேம்நாத் ஆகியோர் மீது குற்றப்புலனாய்வு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் மா.கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தாம்பரம் விமான தளத்தை முற்றுகை இட முயன்ற மதிமுக, நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் கைது


தாம்பரம் விமான தளத்தை முற்றுகை இட முயன்ற மதிமுக, நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் கைது
சென்னை தாம்பரம் விமான தளத்தை முற்றுகை இட முயன்ற மதிமுகவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இலங்கை விமானப் படை வீரர்களுக்கு தாம்பரத்தில் பயிற்சி தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மதிமுகவினர் பேரணியாக சென்றனர். 

பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்


பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்

23072009
http://mathimaran.files.wordpress.com/2011/09/bradlaughwithperiyar.jpg?w=242
தமிழினவாதிகளுக்கும் பெரியாரிஸ்ட்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?
-குமார்
‘kumarasamy mudaliyar High School’ என்று ஒரு பள்ளியின் முகப்பில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிற பெயரை தமிழனவாதிகள் பார்த்தால், ‘பள்ளியின் பெயரை தமிழில் எழுதுக’ என்பார்கள்.
பெரியார் தொண்டர்கள் பார்த்தால், ‘முதல்ல அதுல இருக்கிற முதலியார் என்கிற பெயரை எடு. அப்புறமாகூட தமிழில்ல பெயரை வைச்சிக்க’ என்பார்கள். இதுதான் தமிழனவாதிகளுக்கும் பெரியார் தொண்டர்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம். எதற்கு முன்னுரிமை தருவது என்பதில்.
படத்தில் தோன்றும் நபரின் பெயர் சந்திரவதனன். ஊர் ஜோலார் பேட்டை. MBBS பட்டம் பெற்ற மருத்துவர்.1963-ல் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற நாள் முதல் இன்று வரை சைக்கிளில் கிராமம் கிராமமாக நோயாளி களை தேடிச்சென்று சிகிச்சை அளி த்து வருகிறாராம். 

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கைத் தமிழ் மாணவன்!



இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தமிழ் இளைஞர் ஒருவர் புதியகண்டு பிடிப்பு ஒன்றின் மூலம் சாதனை படைத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ரியோ20 மாநாட்டில் இந்தத் தமிழ் இளைஞரின் கண்டுபிடிப்பு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தமிழரான சாயாந்த் சின்னராசா என்ற 18 வயது இளைஞரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். சயாந்த் நீரை இலகுவில் சுத்திகரிக்கக் கூடிய கருவியொன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஒரு நிமிடத்தில் ஒரு சைக்கிள் டயருக்கு காற்று நிரப்பும் அழுத்தத்தில்15 கலன் நீரை சுத்திகரிக்கக் கூடிய கருவியொன்றை சயாந்த் தயாரித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த உண்மையுள்ளவராக இருந்தால் போர் முடிந்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழர் பிரச்சனையை தீர்த்து வைத்திருக்க முடிந்திருக்கும். "த ஐலன்ட்" பத்திரிகைக்கு சுரேந்திரன் வழங்கிய பேட்டி.


கொழும்பு "த ஐலன்ட்" பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் உலகத் தமிழர் பேரவை முக்கியஸ்த்தர் சுரேந்திரன் தெரிவிப்பு.
"இலங்கை ஜனாதிபதி உண்மையானவராக உள்ளார் என நான் நம்பவில்லை. அவரின் செயல்களே இதற்கு ஆதாரம். அவருக்கு அரசியல் விருப்பும் துணிச்சலும் இருந்திருந்தால் ஏறக்குறைய நூறு சதவீத சிங்கள மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவரும் 'நன்மதிப்புடையவரும்' நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ளவருமான மகிந்த இராஜபக்ச போன்ற ஒரு ஜனாதிபதியால் தமிழ் அரசியற் பிரச்சினையை போர் முடிந்த இந்த மூன்று ஆண்டு காலத்திலாவது மிக இலகுவாகத் தீர்த்து வைத்திருக்க முடியும்."

தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் என்ற நோக்கில் நிமலரூபனின் உடல் பெற்றோரிடம் கையளிக்க மறுப்பு.


தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் என்ற நோக்கில் நிமலரூபனின் உடல் பெற்றோரிடம் கையளிக்க மறுப்பு. 
தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் கொழும்பை அண்மித்த றாகம வைத்தியசாலையில் கொல்லப்பட்டான். உடல் முழுவதும் அடிகாயங்களின் தழும்புகள். அவனது தலையில் காயம். இரண்டு கால்களும் பனம் கிழங்காய் கிழிக்கப்பட்டன. இடுப்பு பகுதியில் பாரிய சிதைவு. தான் மரணிக்கப் போவதாக பலமுறை அவன் அழுதிருக்கிறான்.

 
அன்று நீங்கள் மூட்டிய தீ
எம் விழியோரம் நிரந்தரமாய்...
மறக்க சொல்கிறார்கள்
மரக்கச் சொல்கிறார்கள்...
மறந்திருப்போம்..நாமும்
நிச்சயமாய் மறந்திருப்போம்
நீங்கள் மனிதர்களாக

இலண்டனில் குடியேறியுள்ள இந்த ஆட்கடத்தல் காரர்களால் பாதிக்கப்பட்ட ஏனையோர் உடன் தொடர்பு கொள்ளவும்.

"எம்முடன் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி. theepikalanka@gmail.com "
இலண்டனில் குடியேறியுள்ள இந்த ஆட்கடத்தல் காரர்களால் பாதிக்கப்பட்ட ஏனையோர் உடன் தொடர்பு கொள்ளவும். இலங்கையில் தமிழர்கள் மத்தியில் நிலவும் அசாதாரண நெருக்கடிகள் மற்றும் இடர் துன்பங்களை சாதகமாக பயன்படுத்தி தமிழ் இழைஞர் யுவதிகளிடம் வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் முகவர்கள் சிலரால் கடந்த சில வருடங்களில் பெரும் ஏமாற்று மோசடிகள் நடாத்தப்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

"பாடகர் ஹரிஹரன் இலங்கை இசை விழாவைப் புறக்கணிக்க வேண்டும்


பாடகர் ஹரிஹரனை இலங்கை இசை விழாவிற்கு செல்லவேண்டாம் என்று திரையுலகினருக்கு வைத்த கோரிக்கையை ஏற்று அதற்கான ஆதரவை வழங்கி உள்ளார்கள்...
கவிஞர் தாமரை நேரடியாக பேசி தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்... 
இந்த கோரிக்கையை ஏற்ற இயக்குனர் அமீர், தமிழ் நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் சார்பாகவே எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.... 
இயக்குனர் பாரதிராஜாவும் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்... 
மும்பை விழித்தெழு இளைஞர் இயக்கமும், மும்பை உணர்வாளர்களும் இதற்கான முன்னெடுப்பை செய்து கொண்டிருக்கிறார்கள்.


மே 17 இயக்கம் வெளியிட்ட அறிக்கையில்...

சரணடைந்து காணாமல் போன 40ற்கும் மேற்பட்ட போராளிகளது விபரங்கள் வெளியாகின!


இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைந்தமை பலரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் சிறிலங்கா படையினரால் சித்திரவதைகளின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டுள்ளமை காட்டும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை. – தமிழீழத்திலிருந்து போராளி செங்கோ---

யாழ்.மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் தேசியத்தலைவர் வந்துதித்த வல்வை மண்ணுக்கு அண்டியதாக அமையப்பெற்ற செல்வச்செழிப்புமிக்க நெய்தல் நிலமான பொலிகண்டி மண் பெற்றெடுத்த வீரத்தளபதி பிரிகேடியர் சூசை.
திரு திருமதி தில்லையம்பலம் தம்பதியினருக்கு 1963-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் இரண்டாவது மகனாகப்பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவநேசன். ஏற்கனவே ஒரு அண்ணனை மட்டும் சகோதரனாகக் கொண்ட சிவநேசனை எல்லோரும் செல்லமாக காந்தி என்றுதான் அழைத்தனர். இளமைப்பராயத்தில் பள்ளிப்படிப்புக்களில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற காந்தி உயர் வகுப்புக் கல்விகளை வடமராட்சி வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் முன்னெடுத்திருந்தார்.

கனேடிய தலைவர்களின் வாழ்த்துடன் தமிழ் இளையோர் நடாத்தும் 'தாளம் 2012' நடனப் போட்டி


கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் கலைப் பண்பாட்டுக் குழு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி தமிழ் மாணவர் அமைப்புகளுடன் இணைந்து நடாத்தும் இரண்டாவது 'தாளம்' நடனப் போட்டி ஞாயிறு, யூன் 24 ஆம் நாள் நடைபெறவுள்ளது. ரொறொன்ரோ நகரில் அமைந்துள்ள Metro Toronto Convention Centre இன் John Bassett Theatre இல் இடம்பெறவுள்ள இப்போட்டியில் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம், ரொறன்ரோ பல்கலைக்கழகம், யோர்க் பல்கலைக்கழகம், ஒசாவா பல்கலைக்கழகம், ரயர்சன் பல்கலைக்கழகம், மற்றும் கொன்கோர்டியா பல்கலைக்கழகங்களை சேரந்த 240ற்கு அதிகமான மாணவர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் சில இணையத்தளங்கள் சில நாட்களில் மூடக்கப்படும்! கெஹெலிய.

மேலும் சில இணையத்தளங்கள் சில நாட்களில் மூடக்கப்படும்! கெஹெலிய.
அரசியல்வாதிகளையும், பல முக்கிய நபர்களையும் இலக்குவைத்து சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுக்கும் இணையத்தளங்கள் அடுத்த சில நாட்களில் முடக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எள்ளங்குள பூசகர் மீது சிறிலங்காப் படையினர் தாக்குதல்- காவல்நிலையத்தில் முறைப்பாடு.



எள்ளங்குள பூசகர் மீது சிறிலங்காப் படையினர் தாக்குதல்- காவல்நிலையத்தில் முறைப்பாடு.


வடமராட்சி- எள்ளங்குளத்தில் ஆலயத்துக்குள் சப்பாத்துக் கால்களுடன் நுழைந்த சிறிலங்காப் படையினரைத் தடுத்த, ஆலயப் பூசகர் சிறிலங்கா படையினரால் தாக்கப்பட்ட சமபவம் தொடர்பாக சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, எள்ளங்குளம் ஆதிபராசக்தி அம்மன் கோவில் பூசகரே சிறிலங்கா படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலய வீதியை சிறிலங்கா படையினர் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
வழிபாடு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது சப்பாத்துக் கால்களுடன் சிறிலங்காப் படையினர் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது பூசகர் அவர்களைத் தடுத்து எச்சரிக்கை செய்துள்ளார்.
இதையடுத்து சிலமணி நேரங்களில் அந்தப் பகுதி இராணுவ பொறுப்பதிகாரியுடன் சென்ற சிறிலங்கா படையினர், பூசகருக்கு அச்சுறுத்தியதுடன், அவரைத் தாக்கியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆலயப் பூசகர் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நிராகரித்துள்ளார்.
“சிறிலங்காப் படையினர் அந்த ஆலயச் சுற்றாடலில் துடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆலயத்துக்குள் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற போது படையினரை, பூசகர் ஏசியுள்ளார்.
தாம் சப்பாத்துக் கால்களுடன் உள்ளே செல்லவில்லை என்று சிறிலங்காப் படையினர் கூறிய போதிலும், அவர் விடாமல் ஏசியுள்ளார்.
இதனால் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் பூசகர் மீது எந்த தாக்குதலும் இடம்பெறவில்லை“ என்று அவர் கூறியுள்ளார்.
எள்ளங்குளத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லத்தை அழித்து விட்டு அங்கு சிறிலங்காப் படையினர் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால்: புலிகளின் இறுதிப்போரா???

முள்ளிவாய்க்கால்: புலிகளின் இறுதிப்போரா???


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாக 2009 மே 19ம் திகதி அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெலிக்கடைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், நடத்திய முதலாவது செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 2009 ஏப்ரல் 19ம் திகதியே போர் முடிவுக்கு வந்து விட்டதாக கூறியிருந்தார். இரட்டைவாய்க்காலை கைப்பற்றியதுடன் போர் முடிந்து விட்டதாகவும், அதற்குப் பின்னர்- 2009 மே 19ம் திகதி வரை கேணல்கள் மற்றும் லெப்.கேணல்கள் தலைமையில் நடந்தது தேடியழிக்கும் நடவடிக்கைகள் தான் என்றும் அவர் கூறியுள்ளார். திடீரென அவர் இவ்வாறு கூறியுள்ளதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. 

கவி உலகில் பேரரசராக, காவியத்தாயின் இளையமகனாக விளங்கிய

கவி உலகில் பேரரசராக, காவியத்தாயின் இளையமகனாக விளங்கிய மதிப்பிற்குரிய திரு. கண்ணதாசனின் பிறந்தநாளன இன்று, அவரை நினைவு கூறுகிறேன்.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு 
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!

நாளை வருமென்று நாளைக் கடத்தாதே


நாளை வருமென்று நாளைக் கடத்தாதே
வேளை வருமென்று வெருண்டு திரியாதே
நாளை உனதாக வேண்டும்-அதில்
வீரத்தமிழனின் புலிக்கொடி பறக்க வேண்டும்

கனடாவின் சிறந்த பாடகி மகிஷா '- தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறை சாற்றிய சிறுமி மகிஷாவிற்கு விஜய் ரி.வி புகழாரம்


கனடாவின் சிறந்த பாடகி மகிஷா '- தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறை சாற்றிய சிறுமி மகிஷாவிற்கு விஜய் ரி.வி புகழாரம்
 
*******************************************

கனடாவிலிருந்து தமிழ் நாட்டிற்குச் சென்று விஜய் ரி.வியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்ச் சிறுமி மகிஷாவிற்கு கனடாவின் சிறந்த பாடகி என விஜய் ரி.வி நிகழ்ச்சி நடுவர்கள் குழு புகழாரம் சூட்டியுள்ளது. இந்த வாரம் நடைபெற்ற போட்டியின் போது மகிஷாவின் இசைப் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது. இருப்பினும் கனடியத் தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறை சாற்றிய சிறுமி மகிஷா என்பதில் எந்த ஐயமுமில்லை.

எல்லாளன் இராச்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்.


எல்லாளன் நடவடிக்கை தமிழரின் வீர வரலாற்றின் ஒரு அத்தியாயம். சிங்களத்தின் இராணுவத் திமிர் அடக்க தலைவர் பிரபாகரன் அவர்கள் பெயர் சூட்டி நடாத்திய கரும்புலி நடவடிக்கை.

புலிகளின்குரல் வானொலியின் சிற்றலை ஒலிபரப;பு


எமது   அன்பான   உறவுகளே!

 
தமிழீழ   தேசிய வானொலியான புலிகளின்குரல்,
தமிழீழ மண் எதிரியால் வல்வளைக்கப்பட்டதை அடுத்து  2009 மே 15ம் நாளன்று பண்பலையூடான ஒலிபரப்புக்களை இடைநிறுத்தியிருந்தது. அதன் பின்னர் இரண்டு மாத காலத்தில், தனது சேவையை கரும்புலிகள் நாளான யூலை 5ம் நாள் 2009ஆம் ஆண்டு  மீண்டும் இணையத்தளத்தில் தொடங்கியது.

இதுவரை காலமும், எமது ஒலிபரப்புகளை இணைய வசதி இருப்பவர்களும், செய்கோள் வசதி உள்ளோர்களும் மட்டுமே தொடர்ந்து கேட்க முடிந்தது என்பதை நாம் அறிவோம்.