
மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னர் கிழக்கில் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் கிழக்கின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ முக்கிய பேச்சுகளை நடத்துவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, வடக்கு மாகாணசபைத் தேர்தலை இப்போதைக்கு நடத்துவதில்லைஎன்று தீர்மானிக்கப்பட்டுள்ள அதேசமயம், கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் அதன் நிலைமைகளுக்கேற்ப வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அரசு இந்த முடிவுகளை எடுத்திருப்பதாகவும் அரச உயர்மட்ட வட்டாரங்கள் குறிப்பிட்டன.
No comments:
Post a Comment