Translate

Friday 27 January 2012

வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளுக்கே காணி காவல்துறை அதிகாரங்கள் தேவைப்படுகின்றது:மக்கள் கேட்கவில்லை என்கிறார் பசில் ராஜபக்ஷ.

Posted Imageவடக்கு கிழக்கு மக்கள் காணி, காவல்துறை அதிகாரங்களை தருமாறு எப்போதும் கோரவில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மட்டுமே காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருவதாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

காணி இல்லாதவர்களுக்கு அரசாங்கம் காணிகளை வழங்குவதுடன், காவல்துறையினரின் பாதுகாப்பையும் வழங்கி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கும் உத்தேசம கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கே காணிமற்றும் காவல்துறை அதிகாரங்கள் தேவைப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர் வடக்கு கிழக்கு மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயங்காது எனவும் தெரிவித்துள்ளார்.
http://www.seithy.co...&language=tamil 

No comments:

Post a Comment