Translate

Monday 30 May 2011

எங்கள் பிரச்சனையை தீர்க்க எங்களுக்கும் தெரியும் -பிற நாடுகள் தலையிட கூடாது -மகிந்தா புது உபதேசம் .!

தமிழீழ விடுதலை புலிகள் ஆயுத அரசியல் பலத்தில்  பலம் பெற்றிருந்த வேளை புலிகள் நடத்திய பாரிய சிங்கள இனவழிப்பு படைகளிற்கு  எதிரான மூர்க்க தனமான தாக்குலை நடத்தி பலநூறு படைகளை ஒரே தடவையில் அழித்து பலமில்லியன் ரூபா பெறுமதியான ஆயுதங்களை கைபேற்றி அவற்றுடன்  ஒரு மரபு  படையணியாக புதிய பரிமாணம் பெற்றது .


அப்போது புலிகளின் எதிர் தாக்குதலை முறியடிக்க முடியாத  நிலையிலும் புலிகள் தொடுத்த பல குறிசூட்டு புலிகளின் இராணுவ மரபு நடவடிக்கைகளை தொடர்ந்து உலக நாடுகளின் ஆயுத அரசியல் உதவிகளைநாடியது .

 
எங்களை காப்பற்றுங்கள் இல்லை பயங்கரவாதம் நாட்டை  முழுக்க ஆளும் என அஞ்சிய சிங்களம் பல் நாடுகளின் உதவி பிச்சை கேட்டு மன்றாடி அலைந்தது .
 
கருணா புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து துரோகத்தனமாக  புலிகளின்  தாக்குதல் திட்டங்களை சிங்கள படைகளிற்கு தெரிவித்த நிலையில் பலநாடுகளின் இராணுவ ஒத்தாசையுடன் போரை நடாத்தி பல்லாயிரம் மக்களையும்  புலிகளின் போராடும் திறனையும் மழுங்கடித்து நீர்மூல மாக்கியுள்ளது .
 
இதை அடுத்து ஐநா எடுத்த இலங்கை ஆளும் அரசின் போர் குற்ற அறிவிப்பை அடுத்து மேற்கத்தைய நாடுகள் தமிழர்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என கூறி இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த முனையும்  வேளையில்
மகிந்தா தற்போது உலக நாடுகளிற்கு புது உபதேசம் சொல்லி வருகின்றார் .


எங்கள் நாட்டு பிரச்சனையை நாங்களே தனித்து தீர்ப்போம் .பிற நாடுகள் தலயிட கூடாது என மகிந்த கூறி வருகின்றார் .
(Only we can solve our own problems, and none other"- President )


அதனை தமிழர்களை அழித்த இந்த  நாள் வெற்றி கொண்டாட்ட களிப்பிலும் இதனை அடித்து கூறியுள்ளார் .
இனவழிப்பை நடத்தியவர்கள் தொடர்ந்தும் பம்மாத்து விட்ட படி இருக்க சர்வதேச புவிசார் அரசியல் விட்டு வைத்ததில்லை என்பது  பிற போர்குற்ற இனவழிப்பு புரிந்த நாடுகளின் முன்னுதாரனமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .
 
ஒரு தேசம் ஒரு நாடு என மகிந்த தொடராக கூறி வருவது உலக நாடுகள் இலங்கையை இருநாடுகள் இரு தேசம் என பிரிக்க முற்படுவதின் அச்சத்தின் வெளிப்பாட்டு தன்மையே அவை என்பது புலனாகின்றது ..!

No comments:

Post a Comment