Translate

Friday 17 June 2011

இலங்கை நெதர்லாந்து கூட்டு நாடகமா ? ரகசிய முகாம்களுக்கு நெதர்லாந்து அதிகாரிகள் விஜயம் !

விடுதலைப் புலிகளின் நிவாகக் கட்டமைப்பைச் சேர்ந்த பூவண்ணன், பிரியன் மற்றும் சமாதானச் செயலகத்தைச் சேர்ந்த சிலர் உட்பட சுமார் 12 பேரை நெதர்லாந்து அதிகாரிகள் விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனால் இவர்களில் பலரை இலங்கை இராணுவம் ஏற்கனவே கொன்றுவிட்டது என்ற ஊர்ஜிதமற்ற செய்திகளும் இருக்கிறது. இந் நிலையில் இலங்கை இராணுவம் இவர் தான் அவர் என்று ஆள் காட்டும் நபரிடமே நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனரா என்ற கேள்விகளும் மேலோங்கியுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் புலிகளின் நிதியை முடக்க அல்லது அதன் செயல்பாடுகளைக் கண்டு பிடிக்க நெதர்லாந்து அரசு ஏன் முற்படுகிறது என்பது ஒரு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. அமெரிக்கா இந்தியா போன்ற வல்லரசுகள் காட்டாத கவனத்தை நெதர்லாந்து ஏன் காட்டவேண்டும் ?............. read more

No comments:

Post a Comment