Translate

Saturday 22 October 2011

அலரிமாளிகைக்கு அழைத்து பிரியானி விருந்து கொடுத்தால் கூட மனோவை மசியவைக்க முடியாது என ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும்: மனோ கணேசனை வாழ்த்திய மஹிந்த.


அலரிமாளிகைக்கு அழைத்து பிரியானி விருந்து கொடுத்தால் கூட மனோவை மசியவைக்க முடியாது என ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும்: மனோ கணேசனை வாழ்த்திய மஹிந்த. 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தொலைபேசியில் தன்னுடன் தொடர்பு கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஊன்றுகோளில் நிற்பதைவிட சொந்த காலில் நிற்பது நல்லம் தானே என்று தான் ஜனாதிபதியிடம் கோட்டதாகவும் அதற்கு ஜனாதிபதி சிரித்ததாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும், அலரிமாளிகைக்கு அழைத்து பிரியானி விருந்து கொடுத்துகூட மனோ கணேஷனை மசியவைக்க முடியாது என்று ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும் என்றும் மனோ கணேசன் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிப் பெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் உரையாற்றிய போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment