Translate

Monday 15 August 2011

கோத்தபாயாவின் காட்டுமிராண்டித்தனம் கடல் கடந்து செல்கிறது

கோத்தபாயாவின் காட்டுமிராண்டித்தனம் கடல் கடந்துசெல்கிறது

அனலை நிதிஸ் குமாரன்
இந்தியத் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் சிறிலங்காவின் பாதுகாப்புச்செயலாளரும்ஜனாதிபதியின் இளைய சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச அவர்கள் தமிழகஅரசையும்அரசியல்வாதிகளையும் தாக்கிப் பேசினார்இதன் மூலம் மகிந்த ராஜபக்ச மற்றும்அவரின் சகோதரர்களின் சண்டித்தனம் கடல் கடந்து சென்றுவிட்டது என்பதைஎடுத்துக்காட்டுகிறது

விடுதலைப் புலிகளுடனான மோதல்களின் இறுதிக் கட்டங்களில் பல்லாயிரக்கணக்கில்அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவது குறித்து சர்வதேச நீதிமன்றவிசாரணை தேவை என்ற கோரிக்கை நியாயமற்றது என்றும் கோத்தபாய தெரிவித்தார். “விசாரணை வேண்டும் எனக்கோரும் அமெரிக்காவோபிரிட்டனோ மட்டும் உலகமாகிவிடாதுரஷ்யாசீனாபாகிஸ்தான்பல ஆபிரிக்க நாடுகள்தென் கிழக்காசிய நாடுகள் தங்கள்நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனஇந்தியாவும் ஆதரிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதுஎனவேவிசாரணை என்கிற பேச்சுக்கே இடமில்லைஎன்றும் அப்பேட்டியில் கோத்தபாய தெரிவித்தார்.
சர்வதேச விசாரணை வேண்டும் என வற்புறுத்தும் அண்மைய தமிழக சட்டமன்றத் தீர்மானம்சிறிலங்காவில் நிலவும் யதார்த்தங்களை உணராமல் நிறைவேற்றப்பட்டதாகும்இதில் தமிழகமுதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார்உண்மையிலேயேசிறிலங்காவில் வாழும் தமிழர்கள் மீது அவருக்கு அக்கறை இருக்குமானால் தமிழக மீனவர்கள்நாட்டு எல்லை தாண்டி எமது பகுதிக்கு வந்து மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டும்என்றுகோத்தபாய இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
கருணாநிதியையும் விட்டுவைக்கவில்லை கோத்தபாய
ஈழப்போரின் நான்காம் கட்டத்தின் இறுதிக்காலத்தில் ஏற்பட்ட அழிவுகளுக்கு இந்தியாவின்நடுவன் அரசிற்கு முழுப் பொறுப்பும் உண்டு என்கிற வாதம் உலகத்தமிழர்களிடையேஇருந்துவருகிறதுஇந்திய நடுவன் அரசிற்கு ஆதரவளித்த கலைஞர் கருணாநிதிதலைமையிலான தி.மு.கா.வுக்கும் பங்குண்டு என்கிற வாதம் உலகத்தமிழரிடத்தில் பரவலாகஇருந்து வருகிறது
சிறிலங்கா அரசிற்கு மறைமுகமாக ஆதரவளித்த இந்திய நடுவன் அரசுடன் இணைந்திருந்தகலைஞரையும் கோத்தபாய விட்டுவைக்கவில்லைவெறும் அரசியல்தேவைகளுக்காகவேதான் சிறிலங்காவின் தமிழர் பிரச்சினையை தமிழக அரசியல் கட்சிகள்முன்வைக்கின்றன என்று கூறினார் கோத்தபாயஅத்துடன்சிறிலங்காவின்உள்விவகாரங்களில் தலையிட தமிழகத் தலைவர்களுக்கோ அல்லது ஏனைய பிற நாடுகளின்தலைவர்களுக்கோ உரிமை இல்லையென்றும் கூறினார் கோத்தபாயஇக்கூற்றுக்கள்அனைத்தும் தமிழக தலைவர்களினாலும்தமிழக அரசினாலும் வன்மையாககண்டிக்கப்பட்டுள்ளது.
கட்சி வேற்றுமையின்றி இந்திய நாடாளுமன்றத்திலும்தமிழக சட்டமன்றத்திலும்கோதபாயாவுக்கும்சிறிலங்கா அரசிற்கும் எதிராக குரல் எழுப்பப்பட்டுள்ளது.  அத்துடன்இந்தியநடுவன் அரசு தலையிட்டு சிறிலங்காவின் அராஜகப் போக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டுள்ளது.  தமிழகம் இந்தியாவிற்குள்ளேதான்இருக்குமேயானால் இந்திய நடுவன் அரசு சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமித்துசிறிலங்காவிற்கு அனுப்பி தமிழ்நாட்டின் உணர்வினை தெரியப்படுத்த வேண்டுமென்கிற கருத்துவலுப்பெற்றுள்ளது.
போராட்டத்தின் மூலமாக உரிமையைப் பெற விரும்பும் மக்கள்அவர்களின் அரசியல்உரிமையை நிராகரிப்போரின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என கருணாநிதிதெரிவித்தார்சிறிலங்காவில் தமிழர் இன அழிப்பை தி.மு.ஆதரிக்கவில்லை எனக் கூறியகருணாநிதிதி.மு.அரசியல் இலாபத்திற்காகத்தான் சிறிலங்காவின் தமிழர் விடயத்தைஎடுத்துக்கொண்டுள்ளது என கோத்தபாய கருதினால் அது முற்றிலும் தவறானதுதி.மு..நீண்டகாலமாக அதற்காக போராடுகிறதுதி.மு.., சிறிலங்காத் தமிழரின் விடுதலையைவிரும்புகிறது என்பதை அவர் நன்றாக அறிவார்இ” எனக் கருணாநிதி கூறினார்.
அரசன் அன்றறுப்பான்தெய்வம் நின்றறுக்கும் என்கிற பொருள் கருணாநிதி விடயத்திலும்உண்மையாகிவிட்டதுகண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றி 40000 ஈழத்தமிழர்கள்அழிவதை தனது ஆட்சிக்காலத்திலையிலேயே கண்டுகளித்தார் கலைஞர் என்பதுகுறிப்பிடத்தக்கதுஈழத்தமிழர் விடயத்தில் தமிழகத் தலைவர்கள் கட்சி வேறுபாடுகளை கடந்துஓரணியில் திரண்டு போராட்டங்களை நடத்தியிருந்தால் தமிழீழ தனியரசை சிலநாட்களிலேயே இந்திய நடுவன் அரசினால் பெற்றுக்கொடுத்திருக்க முடியும்தமிழகத்தலைவர்களின் கருத்தொற்றுமை இல்லாமையினால்தான் ஈழத்தமிழர்கள் இன்றுநடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள்கோத்தபாயாவின் அடாவடித்தனத்திற்கு பின்னராவதுதமிழகத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஈழத்தமிழர் விடயத்தில் நடவடிக்கைகளை எடுப்பார்களாஎன்பது ஐயமே
ஏழு கோடித் தமிழர்களின் பலம் என்ன என்பதைக் காட்டும் நேரமிது
தமிழக அரசிற்கே சவால் விட்டுள்ளது மட்டுமல்லாதுதமிழகத்தின் முதலமைச்சர்ஜெயலலிதாவிற்கே சவால் விட்டுள்ளார் கோத்தபாயசவால் விடுபவர்களை வேட்டையாடதுடிதுடிப்பாக இயங்கும் வல்லமையுடையவர்தான் ஜெயலலிதா.  அப்படிப்பட்ட ஒருதலைவருடன் நேரடியாகவே தனது சண்டித்தனத்தை காட்டியுள்ள கோத்தபாயாவை எப்படிஜெயலலிதா கையாள்வார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
கோத்தபாய அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கூற்றுக்களுக்கெதிராக சிறப்பு கவன ஈர்ப்புத்தீர்மானத்திற்கு பதில் அளிக்கும் போது ஜெயலலிதா கூறியதாவது:  “கடந்த 2009-ஆம் ஆண்டுநடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் யுத்தத்தின் போதுமனிதாபிமானமற்ற முறையில் ஈவுஇரக்கமின்றி அங்குள்ள தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல் நடத்தி அதன் விளைவாகபல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்எனதுதலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன்இனப்படுகொலையை நடத்தியவர்களை யுத்தகுற்றவாளிகள் என அறிவிக்க இந்திய அரசுஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்த வேண்டும்என்றும்அது மட்டுமல்லாமல்முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் முழு சம உரிமை கிடைக்கும் வரை அந்நாட்டின் மீதுபொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்8.6.2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது."
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு களங்கம் கற்பிக்கும்வகையில் அதனை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர்கோத்தபாய ராஜபக்சதொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவிப்பது இலங்கை அரசு தான்செய்த தவற்றை நியாயப்படுத்துவது போல் அமைந்துள்ளதுஇந்தத் தீர்மானத்தை நான் அரசியல்ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக கோத்தபாய கூறியிருக்கிறார்இதுவன்மையாகக் கண்டிக்கத்தக்கது."
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அளித்தஅறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே ஒழியஅரசியல்ஆதாயத்திற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை முதலில் நான்சுட்டிக்காட்ட விரும்புகிறேன்சிங்களவர்தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எந்தவிதபாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் தான் நடத்தப்படுகின்றனர் என்றும்மற்றவர்களை விட தங்கள் நாட்டு குடிமக்கள் மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுஇருப்பதாகவும் பேட்டி அளித்திருக்கிறார் கோத்தபாயஇது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும்."
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தத்தின் உச்சகட்டபகுதியான 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரையிலானகாலத்தையும் அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக்கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுஇலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட,குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதியின் மீது இலங்கை இராணுவம் குண்டு மழைபொழிந்ததுமருத்துவமனைகள் மீது குண்டுமழை பொழிந்ததுமனிதாபிமானமற்ற முறையில்செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்ததுஇலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும்ஊடகங்கள் உட்பட யுத்தப் பகுதி வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களைநிகழ்த்தியதுஎன பல மனிதாபிமானமற்ற பன்னாட்டு போர் நெறிமுறைகளை மீறியசெயல்களை இலங்கை இராணுவம் நிகழ்த்தியுள்ளதாக கண்டறிந்துள்ளது."
இது மட்டுமல்லாமல்மிகப் பெரிய ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கைஅரசு அறிவித்த பின்னரும் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த பகுதிகளில்குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கைஇராணுவம் இருந்தது என்றும் இந்த வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளதுமனிதாபிமானஅடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் இலங்கை அரசுதடையை உருவாக்கியதாகவும் .நாவல்லுநர் குழு

No comments:

Post a Comment