Translate

Tuesday 21 August 2012

தமிழ்நாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் எம்மை பாதிக்காது- கெகலிய ரம்புக்வெல


தமிழ் நாட்டின் எதிர்ப்பு நடவடிக்கைகளோ அல்லது டெசோ மாநாட்டின் தீர்மானமோ இலங்கை அரசை எவ்விதத்திலும் பாதிக்கப் போவதில்லை என சிறிலங்காவின் ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் காணப்படக் கூடிய அனைத்து சவால்களிலும் இலங்கை வெற்றி கொள்ளும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசும் இந்திய மத்தியரசுடன் மிக நெருங்கிய அந்நியோன்னிய உறவே காணப்படுகின்றது எனவே தமிழக எதிர்ப்புகள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. இலங்கை அரசாங்கத்தை பொறுத்த வரையில் வேறொரு நாட்டின் பிராந்திய அரசுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் இறையாண்மைக்கோ சுயாதீன தன்மைக்கோ களங்கம் ஏற்படும் வகையில் இந்தியா நடந்து கொள்ளாது என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளது என கெகலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
டெசோவின் தீர்மானங்கள் ஐ.நா. விற்கு கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அரசாங்கம் அலட்டிக் கொள்ளாது ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக எந்தவிதமான தீர்மானங்கள் முன் எடுக்கப்படாலும் அதனை சிறந்த வகையில் எதிர்கொள்வோம் என அவர் தெரிவித்தார்.
முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்தம் முடிவடைந்ததன் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் வடக்கு கிழக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களை அனைத்து தரப்புக்களும் பார்வையிட முடியும்.
நல்லிணக்கத்திற்காக அரசு முன்னெடுக்கும் பல்வேறு வகையான நடவடிக்கைகளும் மிகவும் வெளிப்படையாகவே இடம் பெறுகின்றது. எனவே எவ்விதத்திலும் இலங்கையை எவராலும் குறை கூற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment