Translate

Friday 28 September 2012

இடிந்தகரையில் கடல் மணலில் புதைந்து வைகோ அவர்கள்

இடிந்தகரையில் கடல் மணலில் புதைந்து வைகோ அவர்கள் 

இடிந்தகரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்கள் பங்கேற்றார் . இறந்து போன மீனவர் சகாயத்தின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு அங்குள்ள தேவாலயத்தை சுற்றி வந்தார்.

பின்பு மக்கள் எல்லோரும் மண்ணில் புதையும் போராட்டத்தை முன்னெடுக்கச் சென்றனர் . அப்போது மண்ணில் தங்களை தாங்களே புதைத்துத் கொண்டு நடைபெற்ற போராட்டத்திலும் திரு வைகோ பங்கேற்றார் . உடல் முழுவதும் மணல் ஒட்டிக் கொண்டதால் வைகோ அவர்கள் கடலில் மூழ்கி தன்னை குளிப்பாட்டிக் கொண்டார். இவ்வாறு மக்கள் போராட்டத்தில் ஒரு பெரிய கட்சியின் தலைவர் தானே முன்வந்து பங்கேற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது

No comments:

Post a Comment