Translate

Wednesday 17 October 2012

13 வது திருத்தச்சட்டத்தில் வாசுதேவவிற்கு பிறந்த அக்கறை

ராஜபக்ஷவின் ‘சாம்பார், அமைச்சரவை அமச்சரான வாசுதேவ நாண்யக்கார என்ற நாசகார கம்யூனிஸ்ட் அமைச்சருக்கு 13 திருத்தச்சட்டத்தில் திடீர் அக்கறை பிறந்துள்ளது.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருப்பதானது மிகவும் பயங்கரமான பாரதூரமான அறிவிப்பாகும் என தேசியமொழிகள் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கான அமைச்சர வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இல்லாதொழிக்கப்படவேண்டும் எனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன், 13 ஆவது திருத்தச் சட்டமும், 2002 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடும் ஒரே வகையானவை எனவும் அவர் அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment