
போதக்குறைக்கு ஐ.நா மற்றும் சிறுவர்களுக்கான அமைப்புகள் இனியபாரதியை நேரடியாகவே குற்றவாளி எனச் சாடியுள்ளனர். இந் நிலையில், வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தல்களில், கிழக்கில் மக்களை மிரட்டவும், கள்ள வாக்குகளைப் போடவும் இனியபாரதியை மகிந்த களமிறக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இதுபோன்ற அடாவடிகளைப் புரிந்த நபர் ஒருவரை தனது இணைப்பாளராக வைத்திருக்கும், பெருமை மகிந்தருக்கே சாரும். உலகில் வேறு எந்த மூலையிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை ! இது இவ்வாறு இருக்க இனியபாரதி கைதுசெய்யப்பட்டார் என்றும், போர்குற்றங்களுக்காகவே தாம் அவரைக் கைதுசெய்தோம் எனவும் ராஜீவ விஜயசிங்க லண்டனில் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இனியபாரதியோ இலங்கை இராணுவத்தின், பாதுகாப்போடு சர்வசாதாரணமாக கொழும்பில் வலம் வருகிறார். இதுதான் இலங்கையின் இன்றைய நிலை.
No comments:
Post a Comment