Translate

Tuesday 26 June 2012

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தொடர்சியான போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது.



இலண்டனில் யூன் 26ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4:30மணிக்கு ஆர்ப்பாட்ட ஒன்று கூடல்
இடம்: 10, Downing Street, London, SW1A 2AA

யூன் 26ல் தமிழர் தாயக தமிழர் தலைவர்களால், ஒன்றினைந்து முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு உந்துசக்தியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்று, புலம்பெயர் நாடுகளில் அணிதிரளவேண்டுமென, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.


எங்களுக்கு எங்கட காணி நிலம் வேண்டுமென, வன்னியில் இருந்து ஒலித்திருக்கும் தாயொருவரின் குரல், சிங்கள அரசினால் தமிழர் தாயகத்தில் அபகரிக்கப்படும் நிலங்களது வலியினை வெளிப்படுத்தி நிற்கின்றது.


திருமுறிகண்டியில் இருந்து தாயின் குரல்:

http://www.youtube.com/watch?v=_TCKZdhmsmA&feature=youtu.be
http://youtu.be/_TCKZdhmsmA
மாவை சேனாதிராஜர் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு):

No comments:

Post a Comment