Translate

Thursday 28 June 2012

சி.சிறிதரன் குற்றப்புலனாய்வால் விசாரணை!


வெளிநாட்டு தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த சமகால அரசியல் நிலைமைகள் குறித்த செவ்வியொன்று தொடர்பாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று விசேட குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

இன்று நண்பகல் குறித்த பிரிவினரிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து, நாலாம் மாடிக்குச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமார் 3 தொடக்கம் 4 மணி நேரம் தொடர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த செவ்வி தொடர்பாகவும், கடந்தகாலத்தில் புலிகளுக்கும் அவருக்கும் ஏதேனும் தொடர்பிருந்ததா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எமது செய்தியாளருக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை இந்த விசாரணை தொடரும், என தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், குறித்த செவ்வியின் மூலப்பிரதி எடுக்கப்பட்ட பின்னர் அடுத்த கட்டம் குறித்து சிந்திக்கப்படும் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment