Translate

Thursday 21 July 2011

யாழ். புங்குடுதீவுக் கடலில் மூழ்கி குடும்பஸ்தர் மரணம்!


யாழ். புங்குடுதீவுக் கடலில் மூழ்கி குடும்பஸ்தர் மரணம்!   

யாழ். புங்குடுதீவுப் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் நீரிழ் முழ்கி உயிரிழந்துள்ளதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நல்லதம்பி கிருபானந்தன் (வயது 55) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பீரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment