Translate

Tuesday 6 November 2012

பிரித்தானிய மாநாட்டில் இன அழிப்பை முன்நிறுத்துமாறு தமிழர் பேரவைக்கு த.தே.ம.முன்னணி யோசனை


எதிர்வரும் 7,8,9 ம் திகதிகளில் பிரித்தானிய தமிழா் பேரவையினால் பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்றக்குழுவினருடன் இணைந்து நடாத்தவுள்ள மாநாட்டில் நிறைவேற்றவுள்ளதாக கூறி அவா்களால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பார்வைக்கு கடந்த 2ம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட தீர்மானம் முக்கியமான சில அடிப்படைகளை வலியுறுத்தத் தவறியுள்ளமையினால் தீர்மானத்தில் உள்ளடக்கப்படவேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பான மாற்று யோசனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்களால் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன் பிரதி மொழியாக்கத்தோடு இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் வெறுப்புணர்வு என்பது நீண்டகாலமாக இருந்து வருவது. பிரித்தாநியாவிடமிருந்து சிங்களத்துக்கு அதிகாரம் கைமாற்றிக் கொடுக்கப்பட்டபோதிருந்தே தமிழினம் என்ற ஒன்று இல்லாமல் செய்து விட சிங்களம் முயன்று வருகிறது.

தமிழர்களின் வரலாற்றுப் பூர்வமான தாயகம் அரசினால் உந்தப் பட்ட சிங்களக் குடியமர்வுகளால் தனது புவியியலை இழக்குமாறு சிதைக்கப்பட்டு வருகிறது.

°தமிழ் மக்களின் மொழி உரிமை மறுக்கப் பட்டு வருகிறது.
°தமிழ் மக்களின் கலாசார பாரம்பரியம் அழிக்கப்பட்டு அவர்களது கல்வி புறக்கணிக்கப் படுகிறது.
°தமிழ் மக்களின் தன்னிலை வாய்ந்த பொருளாதாரம்  கையறு நிலைக்கு தள்ளப் பட்டு அழிக்கப் பட்டு வருகிறது.
°தமிழர் தாயகம் புத்தமயமாக்கப் பட்டு வருகிறது. 
தமிழ் மக்கள் இந்தப் போக்கினை ஜனநாயக வழியில் அரசியல் ரீதியாக எதிர்த்தபோது சிறிலங்க அரசு அவர்கள் மீது வன்முறையையும் சாவையும் கட்டவிழ்த்து விட்டது.

இந்த சூழமைவில் தமிழ் மக்கள் கடைசி புகலாக ஓர் ஆயுதப் போராட்டத்தை தொடங்கி சிறி லங்கா அரசின் அழிப்பு வேலைகளை எதிர்த்ததோடல்லாமல் தமது அரசியல் உரிமைகளை தமிழ் தேசத்துக்கு தனியுரிமையை நிலைநாட்டிடவும் முயன்றனர். இந்த நிகழ்வுப் போக்கின் போது தமிழ் தேசத்தின் இருப்பானது திட்டமிட்டமுறையில் சுருக்கப் பட்டது. அதே வேளையில் பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற போர்வையில் சிறிலங்கா அரசு தமிழ் மக்களை தனது சிங்களர் மட்டுமே இடம்பெற்ற ராணுவத்தைக் கொண்டு இனப் படுகொலை செய்தது.

தற்போது தமிழர்களின் கருவி வழி எதிர்ப்பின்றி நிலவும் சூழலில் சிறி லங்கா அரசானது தனது முந்தைய பல்முனை அழிப்பு வேலைகளை தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டு வருகிறது.

டப்ளினில் நடைபெற்ற சிறி லங்கா மீதான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் முடிவுகளையும், பரிந்துரைகளையும் ஏற்று பாராட்டுகிறோம்.

ஐ.நா. பொதுச்செயலரால் நியமிக்கப் பட்ட ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்று பாராட்டுகிறோம்.
தமிழ் மக்கள் மீதான சிறி லங்கா அரசின் மொத்த நடத்தையையும் பற்றி,குறிப்பாக போர்க் குற்றம், மனித இனத்துக்கெதிரான குற்றம் தமிழினப் படுகொலைக் குற்றம் ஆகியன பற்றி ஒரு 'தன்னிச்சையான அனைத்துலக விசாரணை' நடத்தப்பட வேண்டுமென்று நாங்கள் கோருகிறோம்.
இது சார்பாக அனைத்துலக மட்டத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்து பிரதமர்கள் பொருத்தமான அனைத்துலக அமைப்புகளின் மற்றும் வழிமுறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.


No comments:

Post a Comment