
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்தை ரத்துச்செய்யுமாறு மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹானுக்கு எழுதிய கடிதமொன்றில மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரியுள்ளார். இவ்விஜயம் தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல், உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகமாகும் என வைகோ தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செப்டெம்பர் 21 ஆம் திகதி சாஞ்சியில் தனது தலைமையில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் ஆயிரத்துக்கும் குறையாக எண்ணிக்கையானோர் இதில் பங்குபற்றவுள்ளதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்விஜயத்தில் மாற்றம் செய்யப்படமாட்டாது என மத்திய பிரதேச மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment