Translate

Tuesday 1 November 2011

ஈழத் தமிழர்களின் தாயகம் தேசியம் சுய நிர்ணய உரிமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, 'நீதிக்கான நடைப்பயணம்' இன்று சனிக்கிழமை (29-10-2011) மன்செஸ்டர் நகரில் இருந்து பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் நோக்கி ஆரம்பமாகியுள்ளது.
இந்த நீதிக்கான நடைபயணம் திரு.ஜெயசங்கர் முருகையா (நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி) அவர்களினால் தொடங்கப்பட்டுள்ளது. இவருடன் இணைந்து தமிழீழ விடுதலை நோக்கிய தேசிய செயற்பாட்டாளர்களான, குமார், சிவச்சந்திரன், தேவன் ஆகியோரும் தங்களை இந்த நீதிக்கான நடைபயணத்தில் இணைந்துள்ளனர்.

No comments:

Post a Comment