உலகத்தமிழர்கள் எல்லாம் உவகை கொள்ளும் நாளாக அமையப்பெற்ற கார்த்திகை 26ம் நாள் "தேசத்தின் சொத்து" மேதகு வே.பிரபாகரன் அவர்களது 57வது பிறந்தநாள் ஆகும். உலகத்தில் தமிழன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு முழுமுதற் காரணமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை வாழ்த்தி நீங்கள் அனுப்பும் ஆக்கங்கள் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

கவிதையாகவோ வாழ்த்துக்களாகவோ இன்னும் ஏதேனும் ஆக்கங்களாகவோ இருப்பினும் பிரசுரிப்பதற்கு தயாராக உள்ளோம். தாராளமாக உங்கள் ஆக்கங்களை உடனே அனுப்புங்கள். அவற்றை பிரசுரித்து நாமும் அந்த மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.

நிறைவாகும் வரை மறைவாக இரு என்ற வரிக்கு உயிர்கொடுத்து ஈழத்தை மீட்டெடுக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் தலைவனை வாழ்த்தி நாமும் மகிழ்வதுடன் தலைமகனையும் மகிழ்விப்போம்.

"ஈழதேசம் இணையம் இது ஈழம் அமைக்கப்ப பயணம்"

ஈழதேசம் ஆசிரியர் குழு.