Translate

Monday 26 December 2011

கொலையுண்ட பிரித்தானிய பிரஜையின் இளம் மனைவி மீது பாலியல் துஷ்பிரயோகம்

தங்காலை பிரதேச ஹோட்டல் ஒன்றில் நேற்று அதிகாலை இடம்பெற்ற சம்பவத்தின் போது கொல்லப்பட்ட 27 வயதான செஞ்சிலுவைச் சங்கத் தொண்டரான பிரித்தானியாவைச் சேர்ந்த குரும் ஷேக் என்பவரின் 24 வயதான மனைவி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த இந்தப் பெண் தற்போதும் காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்யும் பொருட்டு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சம்பவத்ததுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் தற்போது தலைமறைவாகியுள்ள தங்காலை பிரதேச சபையின் தலைவரான சம்பத் சந்திரபுஷ்பவைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்றிரவு சட்டத்தரணிகள் ஊடாக தங்காலை பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ் வண்டி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அந்த பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவரின் மரணத்திலும் தங்காலை பிரதேச சபையின் தலைவரான சம்பத் சந்திரபுஷ்பவே சம்பந்தப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தேடப்படும் தங்காலை பிரதேச சபைத் தலைவரான சம்பத் சந்துர புஷ்பவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் காணப்படுகிறார்.


http://uravuppaalam.com/?p=11217&mid=56292

No comments:

Post a Comment