Translate

Monday 30 January 2012

இலங்கையில் இருந்து வரும் பொருட்களை புறக்கணிப்போம்


தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எமது இலங்கை தமிழ் மக்கள் பிரச்சனையில் இருக்கும் அக்கறை ரொம்பவுமே வரவேற்கத்தக்கது.

வெளிநாடுகளில் வாழும் எமது ஈழத்து தமிழ் உறவுகள் (கிட்டத்தட்ட 500,000 தமிழர்கள் அமெரிக்காகனடா வில் உள்ளார்கள்.  500,000 தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறார்கள்) மொத்தமாக 1,000,000 அதிகமான மக்கள் வசிக்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை உற்பத்தி பொருட்களாகிய

  •  குளிர்பானங்கள்
  • பலதரப்பட்ட பிஸ்கட்ஸ்
  • பலதரப்பட்ட ஜாம்
  • பால்மாக்கள்
  • டின் மீன்கள்நூடில்ஸ்
  • வேறுபல பொருட்களும்

இவ் 1,000,000 மக்களில்கிட்டத்தட்ட 250,000 குடும்பங்கள் உள்ளனஇவர்களில் பெரும்பான்மையோர் மாதம் ஒன்றிற்கு குறைந்தது $50 இக்கு சரி மேலே குறிப்பிட்டுருந்த பொருட்களை நுகர்வு செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் இவ் பொருட்களை புறக்கணிப்பதன் மூலம் $150, 000,000 ($ 150 மில்லியன்)  (250.000 குடும்பம் * $50 * 12 மாதங்கள்)

இது ஒரு சிறிய கணிப்பீடுதான்ஆனால் பல வழிகளில் எமது மக்கள் இலங்கை பொருட்களையும் / சேவைகளையும்   $1000 மில்லியனுக்கு மேல் கொள்வனவு செய்கிறார்கள். தமிழ்நாட்டு எம் தொப்புள்கொடி உறவுகளே எமக்காக இலங்கை பொருட்களை புறக்கணிப்பு செய்யும் போது.  நாம் மட்டும் எமது நாக்கு ருசிக்காக Nekto சோடா குடிப்பது சரியல்ல.

எமது மக்களுக்காக எவ்வளவோ தியாகிகள் அகிம்சைவழியில் போராடிஉண்ணாவிரதம் இருந்து போராடியும் விடியு இல்லை என்ற படியாலே ஆயுதம் எடுத்து  போராடினார்கள். ஆனாலும் எமக்குள் ஒற்றுமை இல்லாமலும்,துரோகிகளால் காட்டிகொடுத்ததாலும்பல சக்தி வாய்ந்த நாடுகள் இலங்கை அரசுடன் சேர்ந்தே எமது விடுதலை போராட்டத்தையும் முடக்கவும் பல ஆயிரம் மக்களையும் ரசாயனக் குண்டுகள் பாவித்தும் கொன்று ஒழித்தனர்.

எமக்கு பணம் வேண்டும் என்றால் நன்றாக வேலை செய்து உழைக்கிறோம்....
எமது பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு வேண்டும் என்றால் பல இடங்களில் கல்விக்கு அனுப்புகின்றோம்.
எமக்கு வீடுகார்சொகுசு வாழ்க்கை வேண்டும் என்று இரவு பகலாக உளைகின்றோம்.
 
 இவற்றைப்போலவே எமது பிரைச்சனை தீர  வேண்டும் என்றால் நாமே தான் பல வழிகளிலும் போராடி அதை எடுக்க வேண்டும்.

கடந்த 2011 ஆண்டில் பல நாடுகளில் மக்கள் புரட்சி வெடித்து அவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் செய்து தமது தேவையை நிறைவேற்றினார்கள் (உதாரணமாக எகிப்து Egypt, துனிசியா Tunisia போன்ற நாடுகளில்).

எமது பிரச்சனைக்கு நாம் தான் போராட வேண்டும். மக்கள் ஒன்று பட்டு தொடர்ச்சியாக புறக்கணிப்புகளும்,போராட்டங்களும்எமக்கு உள்ள பிரச்சனைகளையும்எமது மக்களுக்கு நடந்த அவலங்களையும் உலக்கு தெரியப்படுத்துவதன் முலமே எமக்கு விடிவு மற்றும் விடுதலை கிடைக்கும்

இல்லையேல்வெளிநாடுகளில் எமது ஆயுட் காலத்தை தொலைத்து விட்டு,  எமது கலாச்சாரத்தையும் தொலைத்து விட்டுதொடர்ச்சியாக வாழுவோமே அனால் எமது பிள்ளைகள்பேரப்பிள்ளைகள்  அனைவருமே தொலைந்து போய்விடுவோம். தமிழன் என்ற ஒரு இனம் படிப்படியாக பல வழிகளிலும் அளிக்கப்பட்டுமுடக்கப்பட்டு இல்லாமல் போய்விடும்.

நாம் ஒன்றுதிரண்டு எமக்குள் கருது வேறுபாடுகள்  இல்லாமல்  தொடர்ச்சியாக புறக்கணிப்புகளும்போராட்டங்களும் செய்வதன் மூலம் 
எமது பிரச்சனைகளை உலகுக்கு தெரியப்படுத்தலாம்.

 

தமிழ் மக்களை நேசிக்கும் உங்களில் ஒருவன்.

No comments:

Post a Comment