Translate

Wednesday 4 January 2012

திருகோணமலையில் பிரித்தானியப் பிரஜை மீது துப்பாக்கிச் சூடு !

பிரித்தானியாவிலிருந்து திருகோணமலைக்கு வந்த தமிழர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் வழி மறித்துத் ரி- 56 ரகத் துப்பாக்கியால் சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். 
திருமலையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் இவர், தற்போது திருகோணமலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியவர் திருமலையில் பிரபல்ய வில்லா என்ற ஹோட்டல் உரிமையாளரான கந்தையா றாஐகோபால் (வயது- 38) டொக்யாட் வீதி, திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றது.


மூதூர், மல்லிகைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எனவும் லண்டனில் தொழில் ரீதியாக குடும்பத்துடன் வசித்து வருபவரும், மூன்று பிள்ளைகளின் தந்தையும் ஆவார் எனவும், லண்டனிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்னரே திருகோணமலை வந்ததாகவும் தெரியவருகின்றது

No comments:

Post a Comment