Translate

Saturday 4 February 2012

முகத்துடன் கோபித்துக்கொண்டு மூக்கையே வெட்டிக்கொள்ளும் முட்டாள் அரசியலை செய்வதில்லை

'எனது முகத்துடன் கோபம் என்பதற்காக எனது மூக்கையே வெட்டிக்கொள்ளும் முட்டாள்தனமான காரியத்தை நான் ஒருபோதும் செய்வதில்லை. ஐதேகவுடன்  எமக்கு கடும் முரண்பாடுகள்  இருக்கின்றன. அதுபற்றி மறைப்பதற்கு எதுவும் கிடையாது. ஆனால்  ஐதேகவை  பழி  தீர்க்க  வேண்டும்  என்பதற்காக எமது  பொது எதிரியான  இந்த மக்கள் விரோத மஹிந்த அரசாங்கத்திற்கு சாதகமான நிலைப்பாடுகளை என்னால் ஒருபோதும் எடுக்க முடியாது. கோடிக்கணக்கான ரூபாய் கையூட்டுகளை வாங்கிகொண்டு மேயர் முஸம்மில் ஹாஜியாரின் கொழும்பு மாநகரசபை நிர்வாகத்தை சீர்குலைப்பதற்கு என்னால் துணை போக முடியாது. இந்த அரசியல் முதிர்ச்சியும், நேர்மையும் என்னிடம் இருக்கின்றன' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்............... read more 

No comments:

Post a Comment