Translate

Monday 12 March 2012

இலங்கைத் தமிழர்கள் பற்றி பேச கருணாநிதிக்கு எந்தத் தகுதியும் இல்லை – ரி.ராஜேந்தர்!


இலங்கைத் தமிழர்கள் பற்றி பேச கருணாநிதிக்கு எந்தத் தகுதியும் இல்லை – ரி.ராஜேந்தர்!

இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் போது, மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறாமல், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டுமென, மத்திய அரசை கேட்க, கருணாநிதிக்கு எந்த தகுதியும் இல்லை என லட்சிய திமுக கட்சியின் தலைவர் விஜய ரி ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற விஜய ரி.ராஜேந்தர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். காங்கிரஸ் அரசு இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.  முல்லைப் பெரியாறு பிரச்னையில், கேரளாவில் ஆளும் காங்கிரஸ் அரசை, மத்திய அரசு கண்டு கொள்ளாமல், தென் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.

No comments:

Post a Comment