Translate

Sunday 25 March 2012

முன்னாள் போராளிகளை மீண்டும் கைது செய்யும் சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள்!


முன்னாள் போராளிகளை மீண்டும் கைது செய்யும் சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள்!

தற்போது பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் விடுதலைப்புலி போராளிகளை சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினர் மீண்டும் கைது செய்து வருகின்றனர். பொத்துவில் விநாயகபுரத்தை சேர்ந்த மயிலர் இராசேந்திரம்என்ற ஒரு பிள்ளையின் தந்தையான முன்னாள் போராளியை சிறிலங்கா இராணுவ புலனாய்வுப்பிரிவினர் நேற்று மட்டக்களப்பு நகரில் வைத்து கைது செய்துள்ளனர்.

தற்போது மேசன் வேலை செய்து வரும் இவரை கைது செய்துள்ள இராணுவ புலனாய்வுப்பிரிவினர் இராணுவ புலனாய்வு பிரிவுடன் பணியாற்ற வேண்டும் என்றும் இல்லையேல் விடுதலை செய்ய முடியாது என நிபந்தனை விதித்துள்ளனர்.
இதேவேளை தம்பிலுவில், பொத்துவில், அக்கரைப்பற்று, உட்பட அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் கிராமங்களில் முன்னாள் விடுதலைப்புலி போராளிகளின் விபரங்களை சேகரிப்பதுடன் அவர்களின் புகைப்படங்களையும் ஒப்படைக்க வேண்டும் என முன்னாள் போராளிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் பொதுவாழ்க்கைக்கு வந்துள்ள முன்னாள் போராளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment