Translate

Thursday 22 March 2012

தமிழீழம் அமைவது தான் திமுகவின் குறிக்கோள்: கலைஞர்


தமிழீழம் அமைவது தான் திமுகவின் குறிக்கோள்: கலைஞர் 

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு திமுக தலைவர் கலைஞர் நன்றி தெரிவித்துள்ளார். 


மேலும் அவர் கூறியுள்ளதாவது,. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படும் அபாயத்தை தடுக்க வேண்டும். தமிழீழம் அமைவது தான் திமுகவின் குறிக்கோள். சகோதர யுத்தம் தான் தமிழீழம் அமைவதை கெடுத்துவிட்டது.
இலங்கை புரிந்த கொடுமைக்கு பரிகாரம் தேட ஐ.நா. தீர்மானம் வழிவகுக்கும். தீர்மானத்தால் உலகத்தின் முன் இலங்கை தலைகுனிந்து விளக்கம் தர வேண்டியுள்ளது. தமிழருக்கு நடந்த கொடுமை தொடராமல் தடுக்க தீர்மானம் உதவும். தீர்மானத்தின் மீது எதிர்த்து வாக்களித்த நாடுகளுக்கு மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றார்.

No comments:

Post a Comment