அமெரிக்க பிரேரணையை ஏற்காவிடில் மலேசியாவுக்கு தலைகுனிவு தான்!
அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக மனிதவுரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு சார்ப்பாக வாக்களிக்குமாறு மலேசிய பிரதமருக்கு மனுவொன்று அனுப்பப்பட்டுள்ளது. 51 அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த மனுவை மலேசிய பிரதமர் நஜீப் துன் ரசாக்கிற்கு கையளித்துள்ளனர்.
இந்தியாவை தளமாக கொண்ட 51 அரச சார்பற்ற அமைப்புகளை உள்ளடக்கிய´அக்கறையுள்ள பிரஜைகளின் குழு´ என்ற அமைப்பினரே இலங்கைக்கு எதிரான இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்க தவறும் பட்சத்தில் மலேசியா சர்வதேசத்திடம் வெட்கித் தலைகுனிய வேண்டியேற்படும் என அந்த அமைப்பின் இணைப்பாளர் கே.ஆறுமுகம் தெரிவித்துள்ளார். எனினும் இதுகுறித்து இலங்கை அரசாங்க தரப்பினர் இதுவரை எந்த வித நிலைப்பாடுகளும் வெளியாகவில்
லை
லை
No comments:
Post a Comment