Translate

Friday 13 April 2012

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் - பிரான்ஸ் இந்திய தூதராலயதிற்கு முன் நடைபெற்ற போராட்டம்!

இந்திய தூதராலயதிற்கு முன் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டும், இந்தப் படுகொலையை செய்யும் சிறி லங்கா ராணுவம் கைது செய்யப்பட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும், தமிழர்களின் நலன்கள் ஏனையே இனங்களின் நலன்கள் போல் பாதுகாக்கப்படவேண்டியவை என்ற வேண்டுகோளுடன் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஒன்றுகூடலை ஏற்பாடு செய்து இருந்தது.


தமிழர்களுக்கு தமது பாரம்பரிய நிலங்களில் உலகத்தில் உள்ள ஏனைய இனங்கள் போல் விடுதலை அடைந்த இனமாக வாழும் உரிமை வேண்டும், 64 வருடங்களாக தமிழருக்கு எதிராக நடாத்தப்படும் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும், இந்த படுகொலைக்கு நீதி வேண்டும் என்று பெப்ரவரி 5 தொடங்கிய நடைபயணம் மார்ச் 5ல் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பிடம் தமிழர்களின் விருப்புகளை அடங்கிய மகஜர் அளிக்கப்பட்டபின், ஜெனிவாவின் அமர்வில் சிறி லங்கவிட்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு வழி தேடித்தரப்போவதில்லை என்பதை வலியுறுத்தி ஜெனிவா மனிதவுரிமை அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் தூதராலயதிட்கு முன் போராட்டங்களும் தமிழ் மக்களின் விருப்புகளை தெரிவிக்கும் போராட்டத்தின் ஆரம்பம் அமெரிக்க தூதவாரலயம் அதன் பின் இன்று இந்திய தூதராலயதிட்கு முன் போராட்டம் அதை தொடர்ந்து பிருத்தானியா, மற்றும் அராபிய, அபிரிக்க நாடுகளின் தூதரலயதிட்கு முன் போராட்டங்களை நடாத்த திட்டங்கள் போடப்பட்டுள்ளது.




இன்று இந்திய அரசிற்கு கொடுக்கப்பட்ட செய்தி, தமிழர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய கடமை இந்தியாவிற்க்கு இருக்கிறது என்றும் , அதில் இந்திய தமிழ் மீனவர்களின் பாதுகாப்பு முக்கிய என்பதையும், இந்திய தமிழ் மீனவர்களின் நலன்களில் ஆளுமை செலுத்தும் சிறி லங்கா ராணுவம் இந்திய சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஓங்கி ஒலிக்கும் எமது ஒவ்வொருவரின் குரலும் சிறி லங்காவை குற்றவாளி கூண்டில் நிறுத்தும் என்பது மட்டுமல்ல ஈழத்தில் வாழும் தமிழர்களின் குரல்ளை உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளுக்கும் இட்டுச்செல்வது எமது கடமை, அதை உலகத் தமிழர்களின் குரலாக நாம் எடுத்துச் செல்வோம் அது விடுதலை பாதையில் இட்டுச்செல்லும் என்பதை நாம் வலியுறுத்துவோம்.
செய்தி- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.

No comments:

Post a Comment