Translate

Friday 20 July 2012

கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு சிறுமிகள் விபச்சாரத்தில்!


கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு சிறுமிகள் விபச்சாரத்தில்!

கொழும்பை மையமாகக் கொண்ட கிராமப் பகுதி சிறுமிகளை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்து வந்த பாதள உலகக்குழு பிரதானி ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தப் பாதாள உலக பிரதானி தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுதது வைக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்புக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட மூன்று சிறுமிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் 16 தொடக்கம் 21  வயதுடையவர்களாவர். ஏமாற்றி இவர்கள் அழைத்து வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஒரு தடவைக்கு 5,000 மற்றும் 10,000 ரூபாவுக்கு இச்சிறுமிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கொம்பனி வீதியில் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.16 ஆம் திகதி கொழும்பு நவம் மாவத்தை குடியிருப்பைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியை குறித்த கான்ஸ்டபிள் பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.
குறித்த சிறுமியை காலி முகத்திடலுக்கு அழைத்துச் சென்று குறித்த கான்ஸ்டபிள் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்திருந்தமை தெரிந்ததே

No comments:

Post a Comment