
கிணறு வெட்டச் சென்று பூதம் கிளம்பிய கதையாகிவிட்டது பொலிசாரின் நிலை. எப்படியாவது நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு வாங்கலாம் என்று சென்றவர்களுக்கு நீங்களே பாதுகாப்பையும் கொடுக்கவேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும். வெந்து நூலாகிச் சென்ற பொலிசார், நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு பாதுகாப்பைக் கொடுக்க நேர்ந்தது. ஆனால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் புலிக்கொடியைக் காட்டிச் சென்ற விடையங்களைப் பற்றி நாம் இங்கே தெரிவிக்கவேண்டிய அவசியமே இல்லை ! அது ஒரு புறம் இருக்கட்டும்.
புதன்கிழமை இரவு நீதிபதி சிறிநிதி நந்தசேகரனின் வீட்டு கூரை மீது சிலர் சரமாரியாக தென்னங் குரும்பைகளை வீசியுள்ளனர். கல்லை விடப் பாரமான, இந்த தென்னங் குரும்பைகளை வீசி அவர் வீட்டின் கூரை ஓடுகளை உடைத்துள்ளனர். போதாக்குறைக்கு கண்ணாடிகள் மீது இதனை வீசி உடைத்துள்ளனர். அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தைக் கூட கணக்கில் எடுக்காமல் இதனை எவரால் செய்யமுடியும் ? இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினரே நீதிபதியை வெருட்ட, இவ்வாறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என மக்கள் தெரிவித்துள்ளனர். யாழில் தென்னங் குரும்பையைப் பாவித்து கூரையில் உள்ள ஓடுகளை எவ்வாறு உடைப்பது என்று இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது செயல்முறைப் பயிற்சிகள் எடுத்துவருகிறார்கள் போல...
No comments:
Post a Comment