Translate

Friday 27 July 2012

அனைத்துலக சமூகத்தை ஏமாற்ற முனைகிறது சிறிலங்கா - சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றச்சாட்டு

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்படலாம் என்ற சிறிலங்கா அரசின் செயல் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் நிராகரித்துள்ளார்.

"இது அனைத்துலக அழுத்தங்களைச் சமாளிக்க தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை.


அனைத்துலக சமூகம் இந்த விவகாரத்தை மறந்து போவதற்காக – காலத்தை இழுத்தடிக்கும் நோக்கிலேயே இந்த ஐந்தாண்டு செயற்திட்டம் வரையப்படடுள்ளது" என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டம், அனைத்துலக அழுத்தங்களை குறைக்கும் முயற்சியே என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

"சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமைகளை மீறிக்கொண்டிருக்கிறது.

இந்த அறிக்கை மூலம் அனைத்துலக சமூகத்தை தவறாக வழிநடத்தப் பார்க்கிறது" என்று ஜேவிபியின் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment