ஜூன் 16ம் திகதி இலங்கைத் தமிழ் அகதிகள் 300 பேரை திருப்பி அனுப்ப பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தனி விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதனில் 300 தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்த அவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். இதனை எதிர்த்து இன்றைய தினம் சில தமிழ் வழக்கறிஞர்கள், அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. ஆனால் ஜூன் 31ம் திகதி மற்றுமொரு விமானத்தையும் வாடகைக்கு அமர்த்த பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் முயல்வதாக மேலும் செய்திகள் கசிந்துள்ளது. அதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுமாயில் வேறு பொறிமுறைகளையும் அவர்கள் கையாளவுள்ளனராம்............. READ MORE
No comments:
Post a Comment