Translate

Friday 2 December 2011

இலங்கையர் கொலையில் புதிய திருப்பம்: பொலிசார் கொலையாளியை நெருங்கிவிட்டனரா ?


கடந்த செவ்வாய் இரவு 9.00 மணியளவில் இலங்கையர் ஒருவர் பிரித்தானியாவின் கிங்ஸ்-வே என்னும் இடத்தில் வைத்து கழுத்து வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இச் சம்பவத்தால் அப் பகுதி மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். இந் நிலையில் கொலையாளிகளை நெருங்கிவிட்டதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். கொலை நடைபெற்ற இடமான ஸ்டான்லி நியூஸ் அன் வைன் கடைக்கு முன்னார் நின்றிருந்த 2 வாகனங்களைப் பொலிசார் தற்போது அடையாளம் கண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாகனம் கொலை நடந்த சமயம் குறிப்பிட்ட கடைக்கு முன்னால் நின்றிருக்கிறது. அதில் பயணித்தவர்கள் அக் கொலையைச் செய்திருக்கலாம். இல்லையேல் அவர்களுக்கு கொலையாளியை தெரிந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.......... read more 

No comments:

Post a Comment