Translate

Thursday 19 January 2012

மலையக தோட்ட தொழிலாளர்களை தோட்டக்காட்டான் என்று, எங்களை ஏளனம் செய்கிறீர்களே, எதற்காக ???


மலையக தோட்ட தொழிலாளர்களை தோட்டக்காட்டான் என்று, எங்களை ஏளனம் செய்கிறீர்களே, எதற்காக ??? அதிகார வர்க்கமே.
ஆம் எங்களின் முன்னோர்கள் செய்த தவறுதான். காடாய் கிடந்ததை மலையகத்தை இயற்க்கை எழில் கொஞ்சும் தேயிலை தோட்ட மலயகமாய் மாற்றி விட்டது அவர்களின் குற்றமே.....!!!!

இந்த உலகில் முதல் தர தேயிலையை அதிக படியாக உற்பத்தி செய்வதிலும் . வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும். இலங்கை எப்போதுமே முதல் இடத்தில் இருக்கிறது. இலங்கைக்கு முதல் வருமானமே இதுதான். இலங்கையின் வெளிநாட்டு கடன்களை இந்த மலையக மக்களின் பணத்தில் தான் கட்டுகிறது. இந்த பணத்தையும் முதல் இடத்தை பெற்று தந்தது யார்? இந்த தோட்ட தொழிலார்களே அவர்கலையா தோட்டக்காட்டான் என்று ஏளனம் செய்யுரிங்க.

இப்போது ஏறத்தாள 18 இலட்சத்துக்கும் அதிகமான மலையக தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்கின்றனர் மூன்றாவது தலைமுறையிலும் தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர்।

அவர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள். அவர்கள் செய்யும் தொழிலுக்குகேற்ப போதிய சம்பளம் கொடுப்பது இல்லை, இந்த நவீன காலதிலும் கூட தேயிலை பறிக்க நவீன இயந்திரம் வாங்கி கொடுப்பதும் இல்லை. எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமலே அந்த மலைகளில் வேலை செய்கிறார்கள்.

அட்டை பூஜ்ஜி, பாம்பு, நுளம்பு ,தேநீர் கொலவி பூஜ்ஜி, இவைகள் கடித்து, காய்ச்சல் வருதும் உயிரலப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு மற்று வழி செய்து கொடுப்பதும் இல்லை.
சரி சொந்த வீடுகளும் கொடுப்பதும் இல்லை .

சுமார் 170 ஆண்டுகளாக இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள் அக்காலத்தில் தொழிலாளர்களுக்கென அமைத்துக்கொடுக்கப்பட்ட தொடர்குடியிருப்புகளில் (லயன்கள் என அழைக்கப்படுகிறது) சுமார் 170ஆண்டுகளுக்கு முன்பு பிரிடிஷ்காரன் கட்டிய அதே லயன் வீடுகளில் தான் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். நானும் அந்த லயத்தில் தான் இருக்கிறேன்

அந்த லயங்களில் மூன்று வீட்டுக்கு ஒரு கழிவறைதான் இருக்கிறது. இதனால் ஏற்படும் சுகாதார பிரச்சனைள். மற்றும் தாக்கு பிடிக்க முடியாத கடும் குளிர். பனி, இடி ,மின்னல்.மழை வெள்ளம், புயல், இவைகளை சமாளித்து எதிர்கொண்டு வாழ்வதற்கு தரமான வீடுகள் கூட இல்லை. இந்த மலையக தமிழர்களுக்கு. இந்த நவீன காலத்தில் கூட மின்சாரம் இல்லாத தோட்டங்கள் நெறிய இருக்கின்றன.
இவர்களும் தமிழர்களே கேர்பார் அற்று வாழ்கிறார்கள்.

இங்கே இதைபற்றி யாரும் பேசுவதே இல்லை என்தும் என் ஆதங்கம்

No comments:

Post a Comment