Translate

Friday 3 February 2012

2588 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவு - பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

news
இலங்கையில் 2011ம் ஆண்டில் மாத்திரம் இரண்டாயிரத்து 588 சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் 
தலைமையகம் தெரிவித்துள்ளது. 
 
அதற்கமைய, 2011 ம் ஆண்டில் ஆயிரத்து 503 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், ஆயிரத்து 85 ஏனைய துஷ்பிரயோகங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
இலங்கை வரலாற்றில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2011ம் ஆண்டிலேயே அதிகளவிலான சிறுவர் பாலியல் 
துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்களில் 22 சிறுவர்கள் பலியாகியள்ளதாகவும் அவர் 
குறிப்பிட்டார்.
 
மேலும், கடந்த வருடத்தில் ஓரின இரத்த உறவுடையோரால் அல்லது உறவினர்களால் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக 9  சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
 
இதேவேளை, கடந்த ஆண்டில் சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக 54 சம்பவங்களும், சிறுவர் படுகொலை 
செய்யப்பட்ட 10 சம்பவங்களும், சிறுவர்கள் மீதான 247 தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தா

No comments:

Post a Comment