Translate

Monday 13 February 2012

புலம்பெயர் தமிழ்ப் பெண்களின் நிர்வாணப் படங்களை விற்பனை செய்கிறதாம் லங்காசிறி


தமிழ் தேசியத் தலைவர், தமிழ் தேசியத் தொலைக்காட்சி, தமிழ் தேசிய வானொலி, தமிழ் தேசிய நாளிதள், தமிழ் தேசிய இணையத்தளம் என்று ஏகப்பட்ட தேசியங்கள் தற்போது தேசிக்காய்களாக புளித்துப்போயுள்ளமை யாவரும் அறிந்தது. இந்நிலையில் அன்று தமிழ் தேசிய ஊடகம் என வர்ணிக்கப்பட்ட லங்காசிறி ஊடகம் தற்போது செத்தவீட்டு இணையத்தளம் என புலித்தேசியத் தலைமையால் நாமம் சூட்டப்பட்டுள்ளதுடன் அவ்விணையம் கலாச்சாரா சீரழிவிற்கு தளம் அமைத்துக்கொடுப்பதாகவும், அதனூடாக தமிழ் பெண்களின் நிர்வாணப்படங்கள் விற்பனையாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பாக புலிகளின் நெடியவன் தரப்பினரால் வெளியிடப்படுகின்ற ஒரு பேப்பர் என்கின்ற பத்திரிகை என்ன சொல்கின்றது என்பதனை கீழே தருகின்றோம். இச்செய்திக்கும் இலங்கைநெற் இற்கும் எந்த தொடர்பும் கிடையாது, புலிகள் தற்போது எவ்வாறு பிளவுபட்டு நிற்கின்றனர் என்பதற்கும், புலிகள் பிளவுபடும்போது , அவர்கள் மேற்கொள்ளுகின்ற ஒவ்வொரு நாசகாரச் செயல்களையும் எதிர்த்தரப்பு எவ்வாறு வெளிப்படுத்துகின்றது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. 

ஓருபேப்பர் செய்தியின் முழுவடிவம் கீழே.


செத்தவீட்டு இணையத்தளத்தில் பலான சங்கதிகள்!

Posted by admin on December 27, 2011 in Blogs, பூராயம் · 0 Comments

உங்கள் கணவன், மனைவி, பிள்ளைகளை கண்காணியுங்கள்!!

நான் எனக்குத் தெரிந்தவர்கள் அல்லது சொந்தக்காரர் யாரும் மண்டையை போட்டிட்டினம், இல்லாட்டி போட்டிருப்பினம் எண்டு விபரம் பாக்கிறதெண்டால் உடனை லங்கா சிறி இணையத் தளத்தைத்தான் திறந்து பாக்கிறனான். பிறகு அப்பிடியே ஊர்செய்தி தமிழ்ப்படம் பாட்டு எண்டு அதிலையே கேக்கிறதாலை அந்த இணையத் தளத்தைதே என்ரை கணணியிலை முதல் பக்கமாய் (home page)மாத்தி வைச்சிருந்தன். ஆனால் உந்த கொம்பியூட்டர் பற்றி கொஞ்சம் விபரம் தெரிஞ்ச சினேகிதன் ஒருத்தன் போனடிச்சு என்ரை கொம்பியூட்டரின்ரை முதல்பக்கத்திற்கு இடியை போடுறமாதிரி ஒரு செய்தியை சொன்னான். அது என்னவெண்டால் லங்காசிறி இணையத்தினரால் நடாத்தப்படும் hi2world தமிழ் அரட்டை சேவை பற்றியது.

அந்த காணொளி அரட்டையூடாக பலநூறு தமிழர்கள் தமிழிச்சிகள் ஆடைகளை கழற்றி ஆபாச அரட்டையடித்துள்ளதோடு தங்கள் நிர்வாண படங்களையும் பரிமாறியுள்ளது தெரியவந்துள்ளது. அதைப்பற்றி அறியலாமெண்டு நினைச்சு அந்த இணையத்திலை அடிக்கடி கடலை போடுற ஒரு பெடியனிட்டை போனடிச்சு விபரத்தை கேட்டன். அவர் அண்ணை என்னட்டை மட்டும் 56 தமிழ் பெட்டையளின்ரை நிர்வாணப்படம் இருக்குதென்று பெருமையாக சொன்னது மட்டுமில்லாமல். அவற்றை அனுப்பியும் வைத்திருந்தார். அவற்றை பார்தால் இளம் பெண்கள் மட்டுமில்லாமல் திருமணமான வயதான பெண்களின் படங்களும் இருந்தது. பலரது திறந்த மார்பில் தாலி தொங்கிக்கொண்டிருந்தது. அதுக்குள்ளை ஆக அநியாயம் என்னவெண்டால் ஒரு 50 தாண்டின அம்மா வேறை கழட்டிப்போட்டு நிண்ட படம். உந்தக் கொடுமையை எங்கை போய் சொல்லுறது இப்படி ஒருவரிடம் மட்டுமே 50ற்கு மேற்பட்ட படங்கள் என்றால் இதுவரை மொத்தமாக அங்கு அரட்டை அடிப்பவர்களிடம் எத்தனை படங்கள் பரிமாறப்பட்டிருக்கும். .நினைத்துப் பாருங்கள்.. தனிப்பட ஒருவன் ஒருத்தி அரட்டையடிப்பதும். ஆடையை கழற்றுவதும் அவரவர் தனிப்பட்ட விடயம். ஆனால். யாழ்ப்பாணத்தில் கலாச்சாரம் கெடுகின்றது என்று புலம்பும் தமிழ்வின், லங்காசிறி இணையமும். தமிழினத்தின் அடுத்த தலைவர்களில் ஒருவர் என சொல்லிக்கொள்ளும் சிறிதரனின் சகோதரரால்; இயக்கப்படும் இணையத்தளத்தில் பெரும் கலாச்சார சீரழிவே நடைபெறுவதோடு அதற்கு அவர்களும் உடந்தையாக இருப்பதும் தான் கேள்விக்குள்ளாகின்றது.

அதே நேரம் இங்கு அரட்டையடிப்பவர்களிற்கு தெரியாமலேயே அவர்களிற்கு பின்னால் உள்ள பெரும் ஆபத்து என்னவென்றால். இப்படியான அரட்டை இணைய வழங்கிகளை பெரும்பாலும் (90 வீதம்) பாகிஸ்தானிலிருந்து இயங்கும் நிறுவனங்களே குறைந்த விலையில் வழங்குகின்றார்கள். இவர்களின் உரிமங்கள் பதிவுகள் திருட்டு பெயர்களில் இருப்பதனால் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கமுடியாது. இவர்கள் தங்கள் இணைய வழங்கியினுடாக பரிமாறப்படும் நிர்வாண காணொளிகள் மற்றும் படங்களை பதிவுசெய்து ஆபாச இணையத்தளங்களை நடத்தி பெரும் பணம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல். இந்தியா பாகிஸ்த்தான், .மலேசியா .சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கைத்தொலைபேசி ஊடாகவும் விற்பனை செய்கிறார்கள். அதாவது புலம்பெயர் தமிழர்களின் அந்தரங்கம் (நிர்வாணப்படங்கள்) வியாபாரமாகின்றது. ஏதோ மண்ணுக்கு போகிற உடல் இப்படியாகவாவது பிரயோசனப்படுகிறது, அந்த வகையில் வேண்டுமானால் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

தன்னுடைய மகனோ மகளோ தனியறையில் கணணியில் பாடம் சம்பந்தமாக அவர்களது நண்பர்களுடன் ஏதோ கதைக்கிறார்கள் என நினைக்கும் பெற்றோர்கள். சிலவேளைகளில் அவர்கள் எந்தெந்த தளங்களில் உலாவுகிறார்கள் கண்காணித்தாலும் பிள்ளை தமிழ் தளத்திலைதானே உலாவுது அதுகளின்ரை தமிழ் ஆர்வத்தை பாராட்டவேணும் என நினைக்கும் பெற்றோர்கள் தமிழ் தளத்தினுடாக பிள்ளை எங்கே போகின்றது என்பதையும் கண்காணிக்க வேண்டும். .அதே நேரம் கணவன் மனைவியை மனைவி கணவனை கண்காணிக் வேண்டிய நிலைக்கு தள்ளிய இது போன்ற தமிழ் இணையத்தளங்கள் தேவைதானா என்பதனையும் தமிழர்கள் தீர்மானிக்கவேண்டும். அதே நேரம் இங்கு தங்கள் படத்தை பரிமாறிய ஆணோ பெண்ணோ நாளை திருமணம் என வரும் பொழுது அரட்டையில் இரண்டு பேருமே பார்த்திருக்கலாம். அல்லது அவங்கடை அம்மா அப்பாவை திருமணம் செய்யப் போகின்றவர்கள் பார்த்திருக்கலாம். இதனால் எத்தனை குடும்பங்கள் பிரியப் போகின்றது.
இது கேள்விப்பட்ட கையோடை நான் முதல் வேலையாய் என்ரை கணணியிலை இருந்து லங்காசிறி முதல் பக்கத்தை மாத்திப்போட்டன். ஏனெண்டால் ஆராவது அதை பாத்தால் நானும் அந்த குறூப்பிலை உடுப்பை கழட்டிற ஆள் எண்டு நினைச்சிடுவாங்கள். நீஙகள் என்ன செய்யப்போறியள்?

1 comment:

  1. எனக்கு தெரிய இந்த ஒரு பேப்பர் காரரின்ரை தமிழ்தேசியம் ஊரிலேயே தெரியும் !! முதலில் தனது முதுகு ஊத்தையை கழுவ வேண்டும் பின் மற்றவர்களின் ஊத்தையை கழுவ புறப்படலாம்

    ReplyDelete