Translate

Thursday 9 February 2012

யாழ் சென்ற மகிந்தர் டக்ளசுடன் தீட்டிய இரகசியசதித்திட்டம் !

 உலகத் தமிழர் பேரவை(GTF) மற்றும் நாடு கடந்த அரசின் (TGTE) செயல்பாடுகளை அமைப்புகளைச் சிதைக்க மகிந்தர் & டக்ளஸ்  திட்டம் 
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மறுநாள்யாழ்சென்ற இலங்கை அதிபர் மகிந்தர் அங்கே டக்ளஸைசந்தித்து இரகசிய திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார்


புலம்பெயர்தமிழர்களை அடக்க ஏதாவது வழியுண்டா எனவும்அங்குள்ள  இயங்கிவரும் உலகத் தமிழர் பேரவை(GTF) மற்றும்நாடு கடந்த அரசின்(TGTE) செயல்பாடுகளை அமைப்புகளைச் சிதைக்க நீங்கள் ஏன் உங்கள் ஆட்களைஅனுப்பக்கூடாது என்று அவர் வினவியுள்ளார்அதற்கு பதிலளித்த டக்ளஸ் தமக்கு பணத்தை தந்தால் தாம் அதனைச் செய்யத் தயார்என மகிந்தரிடம் கூறியுள்ளார்சம்பவ இடத்தில் நின்றிருந்தமுக்கிய நபர் ஒருவரால் இவ்விடையம் அம்பலமாகியுள்ளது


தனக்கு பணமும் மற்றும் தனது ஆட்களை வெளிநாட்டிற்கு அனுப்பஇலங்கை அரசு உதவிசெய்தால் இத் திட்டத்தை நிறைவேற்ற தாம்தயார் என டக்ளஸ் பதிலளித்துள்ளார்உடனே குறுக்கிட்ட மகிந்தர்இதனை தனது தம்பி கோத்தபாயவுடன் பேசுமாறு தெரிவித்துள்ளார்


புலம்பெயர்தேசங்களில் இயங்கிவரும் உலகத் தமிழர் பேரவை(GTF) மற்றும்நாடு கடந்த அரசின்(TGTE) செயல்பாடுகளை முதலில்முடக்கவேண்டும் என மகிந்தர் கூறியுள்ளார்கே.பி தான் முதல்முதலாக நாடு கடந்த அரசு என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கமுனைந்தார் என்றும்அதன் அடிப்படையில் அவருக்குஅவ்வமைப்பில் ஏதாவது தொடர்பு இருக்கும் எனக் குறிப்பிட்டமகிந்தர்புலம்பெயர் தமிழ் மக்கள் தமக்கு பெருத்த தலையிடிஒன்றை தருவதற்கு முன்னர் அவர்களை சரிக்கட்டவேண்டும்எனவும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் செயல்படும் தமிழ் அமைப்புகளுக்குள்  டக்ளஸ் ஆட்களை ஊடுருவவைத்து அதனூடாக அவர்களின் செயல்பாடுகளை முடக்க இவர்கள் இருவரும் சதித்திட்டம்தீட்டியுள்ளனர் என இவர்களுடன் நின்றிருந்த நம்பத்தகுந்த நபர்ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment