Translate

Monday 12 March 2012

கிருபாகரனை தேடவில்லை- இன்ரபோல் ஐ.நாவுக்கு தெரிவிப்பு!


கிருபாகரனை தேடவில்லை- இன்ரபோல் ஐ.நாவுக்கு தெரிவிப்பு!

ஐ.நா. மனித உரிமைச்சபையில் வெளியான ஐ.நா. மனித உரிமை ஆர்வலருக்கான அறிக்கையில், தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் விசுவலிங்கம் கிருபாகரனை தாம் தேடவில்லையெனவும், இவர் பற்றி தம்மிடம் எந்தவிதத் தகவலும் இல்லை யெனவும் இன்ரபோல் ஐ.நா. மன்ற உரிமை நிபுணருக்கு எழுதியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்விடயமாக ஐ.நா. மனித உரிமை நிபுணர் சிறிலங்கா அரசிடம் வினவிய பொழுதும், இதற்கு பதில் அனுப்பாது காலம் கடத்தி வருகிறதாக ஐ.நா. வட்டாரங்கள் தெவிக்கின்றன.
கடந்த காலங்களில் கிருபாகரனின் ஐ.நா.மனித உரிமை செயற்பாடுகள் காரணமாக சிறிலங்கா அரசின் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளுடன் சில புலம்பெயர் நாடுகளிலிருந்து இயக்கப்படும் இணையத்தளங்களும் ‘கிருபாகரனை இன்ர போல் தேடுவதாக’ செய்திகள் வெளியிட்டிருந்தன.

No comments:

Post a Comment