தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தினால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை யார் பாதுகாப்பார்கள்?
ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நாட்டிற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் ஐந்து சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுகின்றன. அதே போன்று அமெரிக்கா மிகவும் மோசமான முறையில் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றது. எவ்வாறாயினும் நாட்டிற்கு எதிரான அனைத்து தீர்மானங்களுக்கு எதிராகவும் இலங்கை தயார் நிலையிலேயே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில் :
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளுள் சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் செயற்படுகின்றன. இதற்கு மேலும் துணை போகும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 47 சர்வதேச நாடுகளுக்கு கடிதம் அனுப்பி இலங்கைக்கு எதிராக செயற்படும் வகையில் கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கள மக்கள் தாய் நாட்டிற்கு எதிராகவரும் அனைத்து சவால்களில் இருந்தும் நாட்டைப் பாதுகாப்பார்கள். ஆனால் இதனால் மீண்டும் பின்னடைவுகளையும் ஆபத்துக்களையும் சந்திக்கப் போகின்றவர்கள் இலங்கையில் வாழும் தமிழ் மக்களேயாவர்.
ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் புலிகளினதும் பிரிவினைவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டது இந்நாட்டு தமிழ் மக்களேயாவார். இந்நிலை மீண்டும் தொடரக் கூடாது என்பதே நம் அனைவரினதும் விருப்பமாகும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய மேற்குலக நாடுகளுடன் இணைந்துகொண்டு நாட்டிற்கு எதிரான தீர்மானங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. இதனைத் தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றார். _
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தச் சவாலை, நாடும் சிங்கள மக்களும் எதிர்கொள்வார்கள். ஆனால் இதனால் பாதிக்கப்படப்போகும் அப்பாவித் தமிழ் மக்களை யார் பாதுக்காப்பார்கள் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நாட்டிற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் ஐந்து சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுகின்றன. அதே போன்று அமெரிக்கா மிகவும் மோசமான முறையில் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றது. எவ்வாறாயினும் நாட்டிற்கு எதிரான அனைத்து தீர்மானங்களுக்கு எதிராகவும் இலங்கை தயார் நிலையிலேயே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில் :
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளுள் சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் செயற்படுகின்றன. இதற்கு மேலும் துணை போகும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 47 சர்வதேச நாடுகளுக்கு கடிதம் அனுப்பி இலங்கைக்கு எதிராக செயற்படும் வகையில் கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கள மக்கள் தாய் நாட்டிற்கு எதிராகவரும் அனைத்து சவால்களில் இருந்தும் நாட்டைப் பாதுகாப்பார்கள். ஆனால் இதனால் மீண்டும் பின்னடைவுகளையும் ஆபத்துக்களையும் சந்திக்கப் போகின்றவர்கள் இலங்கையில் வாழும் தமிழ் மக்களேயாவர்.
ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் புலிகளினதும் பிரிவினைவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டது இந்நாட்டு தமிழ் மக்களேயாவார். இந்நிலை மீண்டும் தொடரக் கூடாது என்பதே நம் அனைவரினதும் விருப்பமாகும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய மேற்குலக நாடுகளுடன் இணைந்துகொண்டு நாட்டிற்கு எதிரான தீர்மானங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. இதனைத் தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றார். _
No comments:
Post a Comment