ஆபத்தை சந்திக்கப் போகின்றவர்கள் இந்நாட்டின் தமிழர்கள் என அமைச்சர் சம்பிக்க பயமுறுத்துகிறாரா?:
வடக்கு, கிழக்கு தமிழர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. மனித உரிமை பேரவையின் 47 சர்வதேச நாடுகளுக்கும் கடிதம் எழுதியதால் ஆபத்தை சந்திக்க போகின்றவர்கள் தமிழர்கள் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க கூறியிருப்பதை ஜனநாயக மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி குமரகுருபரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்நாட்டின் அனைத்து தமிழ் மக்களையும் பயமுறுத்துகிறாரா?
தமிழர்கள் நிறையவே சந்தித்துவிட்டோம். பல மோசமான திட்டமிட்ட இனக்கலவரங்களை கண்டது இந்நாட்டின் தமிழினம். அப்படி ஒரு நிலைமையை நம் நாடு இனியும் அரசியல் ரீதியாக தாங்காது என்பதை தேசபிரேமிகள் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெனீவாவிற்கு செல்லாத நல்லெண்ண சமிக்ஞையை வரவேற்கவில்லையே.
பல மோசமான திட்டமிட்ட இனக்கலவரங்களையும் யுத்தத்தையும் கண்டது இந்நாட்டின் தமிழினம். இந்நாட்டின் இறுதிப் போரில் குறைந்தது 8,000 மக்கள் மாண்டார்கள் என்பது காலம் கடந்து இப்போது அரசு வெளியிட்டுள்ள தகவல். இதனை சம்பிக்க அறிவாரா? இந்நாடு சிங்களவர்களுக்கு முன்னரே தமிழருக்கு சொந்தமானது. பல்லினம் வாழும் நாடு என்பதை ஏன் புரிய மறுக்கின்றீர்கள். அரசின் பங்காளிக் கட்சிகளின் இப்படியான நிலைப்பாடுகளை ஆளும் கட்சி கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் தான் பிரிவினைவாதிகள். சிங்கள இனவாதிகள் பேசினால் தேசபிரேமி. ஒரு தமிழன் இப்படி பேசினால் இனவாதி. அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இனவாதத்தினால் நாடாளுமன்ற ஆசனத்தை தக்கவைத்துக்கொள்ளவா இனவாதம் பேசுகிறீர்கள்? அரசின் பங்காளிக் கட்சிகளின் இப்படியான நிலைப்பாடுகளை ஆளும் கட்சி கவனத்தில் கொள்ளவேண்டும்.
போர்க்குற்றம் என்பதே ஒரு பொழுதும் ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. யுத்தக்குற்றம் புரிந்த தனிநபர்களுக்கே உரியது எதிரானது என்பதை இவர்கள் அறிவார்களா? ஜெனீவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றும் என்று தெரிவிக்கையில், அமைச்சர் பாட்டலி சம்பிக்கவும் டாக்டர் குணதாச அமரசேகரவும் தமது அரச விரோத பரஸ்பர இன சௌஜன்ய விரோத கருத்துக்களை கூறிவருவதையும் இவர்கள் போன்ற இனவாதிகள் தான் சமாதான விரோதிகள் என்பதையும் அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். இதை சமாதானத்தை விரும்பும் சிங்கள மக்கள் நன்கே புரிந்துகொள்வார்கள்.
நாடு இன்னொரு இனக்கலவரத்தை சந்திக்க முடியாது என்பதை தேசபிரேமிகள் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியானால் சர்வதேச அளவில் இன்றைய ஜெனீவா மாநாட்டை விட மோசமான நிலையை இலங்கை அரசு சந்திக்க நேரிடும். அப்பொழுதும் இவர்கள் இப்படியே இனவாதம் பேசிக்கொண்டே இருப்பார்கள். அரசை மீட்க முன்வரமுடியாது முழிப்பார்கள். இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெனீவாவிற்கு செல்லாத நல்லெண்ண சமிக்ஞையை வரவேற்கவில்லையே. நல்லெண்ணமும் நல்லிணக்கமும் விசுவாசமாக உளத்திலிருந்து அடி மனதில் உருவாகவேண்டும்.
http://www.tamilmirr...6-07-12-19.html
வடக்கு, கிழக்கு தமிழர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. மனித உரிமை பேரவையின் 47 சர்வதேச நாடுகளுக்கும் கடிதம் எழுதியதால் ஆபத்தை சந்திக்க போகின்றவர்கள் தமிழர்கள் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க கூறியிருப்பதை ஜனநாயக மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி குமரகுருபரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்நாட்டின் அனைத்து தமிழ் மக்களையும் பயமுறுத்துகிறாரா?
தமிழர்கள் நிறையவே சந்தித்துவிட்டோம். பல மோசமான திட்டமிட்ட இனக்கலவரங்களை கண்டது இந்நாட்டின் தமிழினம். அப்படி ஒரு நிலைமையை நம் நாடு இனியும் அரசியல் ரீதியாக தாங்காது என்பதை தேசபிரேமிகள் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெனீவாவிற்கு செல்லாத நல்லெண்ண சமிக்ஞையை வரவேற்கவில்லையே.
பல மோசமான திட்டமிட்ட இனக்கலவரங்களையும் யுத்தத்தையும் கண்டது இந்நாட்டின் தமிழினம். இந்நாட்டின் இறுதிப் போரில் குறைந்தது 8,000 மக்கள் மாண்டார்கள் என்பது காலம் கடந்து இப்போது அரசு வெளியிட்டுள்ள தகவல். இதனை சம்பிக்க அறிவாரா? இந்நாடு சிங்களவர்களுக்கு முன்னரே தமிழருக்கு சொந்தமானது. பல்லினம் வாழும் நாடு என்பதை ஏன் புரிய மறுக்கின்றீர்கள். அரசின் பங்காளிக் கட்சிகளின் இப்படியான நிலைப்பாடுகளை ஆளும் கட்சி கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் தான் பிரிவினைவாதிகள். சிங்கள இனவாதிகள் பேசினால் தேசபிரேமி. ஒரு தமிழன் இப்படி பேசினால் இனவாதி. அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இனவாதத்தினால் நாடாளுமன்ற ஆசனத்தை தக்கவைத்துக்கொள்ளவா இனவாதம் பேசுகிறீர்கள்? அரசின் பங்காளிக் கட்சிகளின் இப்படியான நிலைப்பாடுகளை ஆளும் கட்சி கவனத்தில் கொள்ளவேண்டும்.
போர்க்குற்றம் என்பதே ஒரு பொழுதும் ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. யுத்தக்குற்றம் புரிந்த தனிநபர்களுக்கே உரியது எதிரானது என்பதை இவர்கள் அறிவார்களா? ஜெனீவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றும் என்று தெரிவிக்கையில், அமைச்சர் பாட்டலி சம்பிக்கவும் டாக்டர் குணதாச அமரசேகரவும் தமது அரச விரோத பரஸ்பர இன சௌஜன்ய விரோத கருத்துக்களை கூறிவருவதையும் இவர்கள் போன்ற இனவாதிகள் தான் சமாதான விரோதிகள் என்பதையும் அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். இதை சமாதானத்தை விரும்பும் சிங்கள மக்கள் நன்கே புரிந்துகொள்வார்கள்.
நாடு இன்னொரு இனக்கலவரத்தை சந்திக்க முடியாது என்பதை தேசபிரேமிகள் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியானால் சர்வதேச அளவில் இன்றைய ஜெனீவா மாநாட்டை விட மோசமான நிலையை இலங்கை அரசு சந்திக்க நேரிடும். அப்பொழுதும் இவர்கள் இப்படியே இனவாதம் பேசிக்கொண்டே இருப்பார்கள். அரசை மீட்க முன்வரமுடியாது முழிப்பார்கள். இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெனீவாவிற்கு செல்லாத நல்லெண்ண சமிக்ஞையை வரவேற்கவில்லையே. நல்லெண்ணமும் நல்லிணக்கமும் விசுவாசமாக உளத்திலிருந்து அடி மனதில் உருவாகவேண்டும்.
http://www.tamilmirr...6-07-12-19.html
No comments:
Post a Comment