Translate

Monday 12 March 2012

பாலைதீவு உற்சவத்தில் திரண்ட பக்தர்கள்


பாலைதீவு உற்சவத்தில் திரண்ட பக்தர்கள்
news
 பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தில் நாடெங்கிலும் இருந்து 13 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் நேற்றுக் கலந்து கொண்டனர். நேற்றுக்காலை 7.30 மணிக்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

 
 
நாடெங்கிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகளிலும், முன்னூறுக்கும் மேற்பட்ட றோலர்களிலும் யாத்திரிகர்கள் பாலைதீவுக்கு வந்திருந்தனர். குடிதண்ணீர், சுகாதாரம், மலசல கூட வசதிகளை வேலணை பிரதேச சபையினர் மேற் கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment