Translate

Sunday 25 March 2012

வெளிமாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்காதே என வலியுறுத்தி தமிழகமெங்கும் த.இ.மு. போராட்டங்கள்!


வெளிமாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்காதே!
தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

தமிழகம் மிக வேகமாக வெளியார் மயமாகி வருகிறது. உலகமயம் என்பதே வெளியார் மயம் தான்! தமிழகத் தொழில், வணிகம் ஆகியவற்றை ஏற்கெனவே மார்வாரி, குசராத்தி சேட்டுகளும் மலையாளிகளும் கைப்பற்றி மேலாதிக்கம் செய்கின்றனர்.


கடந்த சில ஆண்குளாக அயல் மாநிலத்தவர் அன்றாடம் ஆயிரம் ஆயிரமாய் வந்து குவிகின்றனர். இவர்கள், தமிழர்களுக்குரிய தொழில், வணிகம், வேலை, கல்வி, உணவுப் பொருள்கள், தண்ணீர், மின்சாரம், இருப்பிடம் உள்ளிட்ட அனைத்தையும் உறிஞ்சிக் கொள்கின்றனர்.

இதனால் தமிழர்கள் தொழில், வணிக வாய்ப்புகளை இழக்கின்றனர். வேலையின்மை, வறுமை, சொந்த மண்ணில் அதிகாரமின்மை, உணவு, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவற்றில் பற்றாக்குறை எனத் தவிக்கின்றனர். எந்த வகை வரைமுறையும் இல்லாமல் வரம்பும் இல்லாமல் திமுதிமு என்று வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டில் குடியேற அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களால் கொள்ளை, கொலை, பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் அதிகரித்து விட்டன. பிற மாநிலத்தவரால் பல்வேறு சமூக, பண்பாட்டுத் தீங்குகளும் உருவாகின்றன.

ஒரு தேசிய இனத் தாயகத்தின் மக்கள் தொகையில் பிற இனத்தவர் பத்து விழுக்காட்டிற்கு மேல் இருந்தால் அத்தேசிய இனமக்கள் எல்லாவகை உரிமை இழப்புகளுக்கும் வாழ்வுரிமை மறுப்பிற்கும் உள்ளாவார்கள்.

தமிழகத்தில் வெளியார் குவியும் வேகம் இதே போக்கில் தொடர்ந்தால், இன்னும் பதினைந்து ஆண்டுகளில் தமிழ் மக்களின் எண்ணிக்கைக்குச் சமமாக அயல் இனத்தார் இங்கு நிரம்பி விடுவர். அதன் பிறகு, தமிழகம் தமிழர் தாயகமாக இருக்காது. கலப்பினத் தாயகமாக மாறும்.

வெளி இனத்தார் தங்கு தடையின்றி மிகை எண்ணிக்கையில் குடியேற அனுமதிப்பதால் 1956 நவம்பர் 1இல் மொழிவழி தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்டதன் நோக்கம் தகர்க்கப்படுகிறது. எனவே, 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய வெளியாரை வெளியேற்ற வேண்டியது கட்டாயத் தேவை ஆகும். மராட்டியம், அசாம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெளியாரை வெளியேற்றும் போராட்டங்களும் கோரிக்கைகளும் எழுந்ததை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இப்பொழுது, உடனடிச் செயலாக வெளிமாநிலத்தவர்க்கு புதிதாக குடும்ப அட்டையோ, வாக்காளர் அடையாள அட்டையோ வழங்கக் கூடாது என்று தமிழக இளைஞர் முன்னணி போராட்டம் நடத்துகிறது.
26.03.2012 திங்கள் அன்று தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம், பேரணி என பல்வேறு வடிவங்களில் பரப்புரைகள் நடக்கின்றன. இந்நிகழ்வுகளில் திரளான தமிழ் இளைஞர்களும், பொது மக்களும், ஊடகவியலாளர்களும் பங்கு கொள்ள வேண்டுகிறேன்.



தஞ்சை
தஞ்சை மேரி முனையிலிருந்து காலை 10 மணியளவில் துவங்கும், கோரிக்கைப் பேரணி முக்கிய வீதிகளின் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சென்றடைகின்றது. தமிழக இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர்  குழ.பால்ராசு பேரணியைத் தொடங்கி வைக்க, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழா நா.வைகறை பேரணியை முடித்து வைத்துப் பேசுகிறார்.

கோவை
கோவை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11 மணியளவில் துவங்கும், த.இ.மு. கோரிக்கைப் பேரணி முக்கிய வீதிகளின் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சென்றடைகிறது. த.இ.மு. செயலாளர் தோழர் இராஜேசுக்குமார் தலைமையில் நடக்கும் இந்நிகழ்வில், த.இ.மு. மாநகரச் செயலாளர் தோழர் பா.சங்கர், செயலாள தோழர் பிரை.சுரேஷ்கிளைச் செயலாளர் தோழர் இரா.கண்ணன், த.இ.மு. அமைப்பாளர்கள் தோழர் வே.திருவள்ளுவன், தோழர் ம.தளவாய்சாமி உள்ளிட்டோர் விளக்கவுரை நிகழ்த்துகின்றனர்.

குடந்தை
த.இ.மு. செயலாளர் தோழர் ச.கணேசன் தலைமையில், குடந்தை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் காலை 10 மணியளவில் தொடங்கும் பேரணியை தோழர் பெ.பூங்குன்றன்(த.தே.பொ.க.) துவக்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். கோட்டச்சியர் அலுவலகத்தில் நிறைவடையும் பேரணியை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முடித்து வைத்துப் பேசுகிறார்.

சிதம்பரம்
சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் தலைமை தாங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தோழர் பா.பிரபாகரன்(த.தே.பொ.க.) ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்துகின்றனர்.

ஒசூர்
ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் காலை 10 மணியளவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.இ.மு அமைப்பாளர் தோழர் பி.சுப்ரமணியன் தலைமை தாங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர்கோ.மாரிமுத்து, தோழர் இராசு.நவரசன் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்துகின்றனர்.

சென்னை
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் தமிழ்க்கனல் தலைமை தாங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படுகின்றது.

திருச்சி
திருச்சி தொடர் வண்டி நிலையம் அருகிலுள்ள காதிகிராப்ட் முன்பு காலை 10 மணியளவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமை தாங்குகிறார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, இலக்கிய விமர்சகர் வீ.ந.சோமசுந்தரம் உள்ளிட்டோர் விளக்கவுரை நிகழ்த்துகின்றனர். தோழர் மு.தியாகராஜன் நன்றி நவில்கிறார்.

கீரனூர்
கீரனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பகல் 1 மணியளவில், குன்றாண்டார் கோவில் ஒன்றிய த.தே.பொ.க செயலாளர் தோழர்சி.ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெறும் கோரிக்கைப் பேரணியை, தோழர்.குளத்தூர் கிள்ளிவளவன் தொடங்கி வைக்கிறார். பொறியாளர் அகன்(பாவாணர் மன்றம்) பேரணியை நிறைவு செய்து பேசுகிறார். தோழர்.இலெ.திருப்பதி நன்றி நவில்கிறார்.

•••

மேற்கண்ட நிகழ்வுகளில், தமிழ் உணர்வாளர்களும், மனித நேயர்களும், பத்திரிக்கையாளர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.


தோழமையுள்ள,
நா.வைகறை
பொதுச் செயலாளர்,
தமிழக இளைஞர் முன்னணி
நாள்   :  25.03.2012
இடம்  :  தஞ்சை

No comments:

Post a Comment