Translate

Tuesday, 6 March 2012

தமிழர் நலம் பேரியக்கம் செய்தி


தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் மும்பையில் மாட்டுங்கா பகுதியில் நீதிக்கான பயணம் நடத்தப்பட்டது.

ஐநாவில் நடைபெற்று வரும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி இன்று (திங்கள்) மும்பையில் மாட்டுங்கா பகுதியில் உள்ள அரோரா திரையரங்கிலிருந்து மாட்டுங்கா தபால் நிலையம் வரை நீதிக்கான பயணம் நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான மு. களஞ்சியம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழர் நலம் பேரியக்கத்தின் மாராட்டிய மாநிலத் தலைவர் நா. காமராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த நடை பயணத்திற்கு தமிழர் நலம் பேரியக்கத்தின் நிர்வாகிகளான சி. ராஜேந்திரன், கன்னிவெடி கந்தசாமி, ஜி. செல்வராஜ், ரமேஷ் நாயுடு, பழனி கே. தேவேந்திரா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் வட மாநிலத்தவர் உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்யில் தமிழ் இலெமுரியா பத்திரிகையின் தலைமை ஆசிரியர் சு.குமணராசன், மும்பை மாநரக பாஜ செயலாளர் ராஜா எம். உடையார், இந்திய ஜனநாயக கட்சியின் மராட்டிய மாநில தலைவர் எம். கோவிந்த சாமி, பொதுச் செயலாளர் பெருமாள் அ. தேவன் தம்பி செல்வம், அ. கணேசன், விழித்தெழு இளைஞர் இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிருபர்களிடம் பேரிய மு. களஞ்சியம், குமணராசன், ராஜா எம். உடையார் ஆகியோர் இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று பேசினர். நடை பயணத்தின் முடிவில் ஐநா மனித உரிமை கவுன்சிலின் கமிஷனர் நவநீதம் பிள்ளைக்கு கோரிக்கையை முன் வைத்து அஞ்சலட்டை அனுப்பப்பட்டது.  

No comments:

Post a Comment