Translate

Monday, 5 March 2012

இறுதிக்கட்டப் போரின்போது சேவையாற்ற அனுமதி தரவில்லை: கோத்தபாயவின் கருத்துக்கு மறுப்பு


இறுதிக்கட்டப் போரின்போது சேவையாற்ற அனுமதி தரவில்லை: கோத்தபாயவின் கருத்துக்கு மறுப்பு
news
இறுதிக் கட்ட போரின் போது சேவையாற்ற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று மனிதாபிமான தொண்டு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.


இறுதிக்கட்டப் போரின் போது காயமடைந்த படையினருக்கு மனிதாபிமான தொண்டு நிறுவனத்தால் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ இந்திய ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
போர் இடம்பெற்ற வலயத்தில் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் அளிக்குமாறு பல தடவைகள் அரசை வேண்டிய போதிலும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று மனிதாபிமான தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு ஏனைய தொண்டு நிறுனங்களுடன் மனிதாபிமான தொண்டு நிறுவனமும் வெளியேறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009 ஆண்டு மே மாதம் போர் நிறைவடைந்ததன் பின்னரே மனிதாபிமான  தொண்டுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததாக மனிதாபிமான தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment