Translate

Thursday 1 March 2012

தூக்கில் தொங்கிய த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன் MP !

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவியொன்று நேறு யாழ்பல்கலைக்கழக வளவினுள் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தது. மாலை வேளையினில் இது தொங்க விடப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. தமிழின துரோகி சுமந்திரன் எனத்தெரிவிக்கப்பட்டிருந்த அக்கொடும்பாவியினில் தொங்க விடப்பட்டிருந்த சுலோக அட்டையினில் போர் குற்ற விசாரணை எங்கே எனக்கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது.
படையினரதும் பொலிஸாரினதும் பூரண கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள யாழ்பல்கலைக்கழக வளவினுள் எவ்வாறு சுமந்திரனின் கொடும்பாவி எடுத்து வரப்பட்டிருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலகுவினில் எவரும் களற்றி எடுத்து செல்லாதிருப்பதை உறுதிப்படுத்தும் கையினில் உயரமான மாடிக்கட்டடமொன்றினில் அது தொங்க விடப்பட்டிருந்தது. இதனிடையே கூட்டமைப்பினர் ஜெனிவாவிற்கு செல்வதில்லையென எடுக்கப்பட்ட முடிவை உடனடியாக மீள் பரிசோதனை செய்ய வேண்டுமென கோரும் ஊடக அறிக்கையொன்றினை மாணவர் ஒன்றியம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment