Translate

Monday 23 April 2012

இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட "கலைச்சங்கமம் 2012"


இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட "கலைச்சங்கமம் 2012"
கடந்த வாரம் இத்தாலி ரெஜியோ எமிலியா நகரில் தமிழ் இளையோர் அமைப்பினால் "கலைச்சங்கமம் 2012" மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது. இந் நிகழ்வானது தமிழ் இளையோர்களினது கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு தளமாக இருந்து வருகின்றது. இத்தாலி மட்டுமில்லாமல் அதனை சுற்றி உள்ள நாடுகளிலும் இருந்து பல இளையோர்கள் வந்து பங்கு பற்றி இந் நிகழ்ச்சி சிறப்பு பெற உதவினார்கள்.


தமிழீழ தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வில் அன்னை பூபதி அம்மாவின் நினைவஞ்சலியும் இடம்பெற்றது. அத்தோடு தனி நடனப் போட்டிகளும் குழு நடனப் போட்டிகளும் இடம்பெற்றன. வந்திருந்த மக்களுக்கான பல நகைச்சுவை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந் நிகழ்சிக்கு சிறப்பு விருந்தினராக புகழ் பெற்ற திரு வசந்த் செல்லத்துரை அவர்கள் கலந்து ஓர் அட்டகாசமான நிகழ்ச்சியை வழங்கினார்.
நிகழ்ச்சியின் இடையில் தமிழ் இளையோர் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட இனப்படுகொலை சம்மந்தமான ஆவணம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment